270 உயிர்களை பலி வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ171 விமானம் பறக்க தொடங்கிய சில வினாடிகளில் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்து 240 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விமான விபத்து புலனாய்வு அமைப்பு அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் தாக்கல் செய்திருக்கிறது . அந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் விபத்துக்கான காரணம் என்ன, விமானம் புறப்பட்டது தொடங்கி விபத்து நேர்ந்த வரை விமானிகளுக்கு இடையே நடந்த கலந்தூரையாடல் என்ன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கியமான அம்சங்களை பார்க்கலாம்.
எத்தனை வினாடிகளில் விபத்து?: இந்த அறிக்கையின் படி விமானம் புறப்பட்டது இந்திய நேரப்படி பகல் 01:08:38 மணி. விமானிகள் மே டே அழைப்பு விடுத்தது 01:09:05 மணி, விமானம் மருத்துவ கல்லூரி கட்டடத்தின் மீது மோதியது 01:09:11 மணி. அதாவது புறப்பட்ட 32 வினாடிகளில் அனைத்தும் நடந்துள்ளது.
நடுவானில் செயலிழந்த என்ஜின்கள்: விமான விபத்து தொடர்பான விசாரணையில் விமானத்தின் இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது திடீரென தடைபட்டு நடுவானில் என்ஜின்கள் செயலிழந்து போயுள்ளன. அதாவது என்ஜின்கள் RUN என்ற நிலையில் இருந்து CUTOFF என்ற நிலைக்கு சென்றுள்ளன. முதல் என்ஜின் நின்று போன அடுத்த வினாடியே இரண்டாவது என்ஜினும் நின்று போயுள்ளது. விமானிகள் துரிதமாக செயல்பட்டு என்ஜின்களை ரீஸ்டார்ட் செய்வதற்கு முயற்சி செய்து இருக்கின்றனர். அப்பொழுது முதல் என்ஜினை பகுதியளவு செயல்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இரண்டாவது என்ஜினை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.
விமானிகள் கலந்துரையாடல்: விமானியில் ஒருவர் ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது, நீ செய்தாயா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு மற்றொரு விமானி நான் செய்யவில்லை என கூறுகிறார். எனவே ஒட்டுமொத்த அமைப்பே செயலிழந்து எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது தவறுதலாக சுவிட்சுகள் இயக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிசிடிவி: இரண்டு என்ஜின்களும், செயலிழந்த உடனே விமானத்தில் இருக்கும் எமர்ஜென்சி அமைப்பான Ram Air Turbine ஐ விமானிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது .
விமானத்தில் கோளாறா? : விமான இறக்கைகள் பறக்கும் போது என்ன அமைப்பில் வைக்கப்பட வேண்டுமோ அதில் தான் வைக்கப்பட்டிருந்தன அதில் எந்த தவறும் நிகழ்வில்லை. விமானம் புறப்பட்டு மேலே எழுந்த வரை அனைத்து பாகங்களும் முறையாகவே செயல்பட்டிருக்கின்றன.
பறவைகள் மோதியதா?: விமானத்தின் மீது எந்த பறவையும் மோதவில்லை , வானிலை பிரச்சினை இல்லை, எரிபொருளில் கலப்படம் இல்லை, விமானத்தில் தீ விபத்து ஏதும் நேரவில்லை, ஆபத்தான பொருட்கள் எதுவும் விமானத்தில் கொண்டு செல்லப்படவில்லை என விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானிகளும் உடல் ரீதியான ஃபிட்டாக இருந்தனர் அவர்களுக்கு போதிய பணி அனுபவம் இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications