ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு திடீர் தலைசுற்றல், குமட்டல்.. விமானத்தில் வழங்கிய உணவு காரணமா?

மும்பை: இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் ஏர் இந்தியா விமானத்தின் சேவைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த 12ஆம் தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர அனைத்து பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து ஏர் இந்தியா மீது பயணிகளுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழலில் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு திடீர் தலைசுற்றல், குமட்டல்.. விமானத்தில் வழங்கிய உணவு காரணமா?

திங்கட்கிழமை அன்று லண்டனின் ஹீட்திரோ விமான நிலையத்திலிருந்து மும்பையை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு திடீரென தலை சுற்றல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டு இருக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகள் லண்டனிலிருந்து புறப்பட்ட ஏஐ130 விமானத்தில் பயணம் செய்த சுமார் 6 விமான பணியாளர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 11 பேருக்கு தலைசுற்றல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

விமான பயணத்தின் போதே இவர்களுக்கு இந்த உடல் நலக்குறைவு கண்டறியப்பட்டிருக்கிறது. விமானத்தில் உணவு உண்ட பிறகு இது ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே விமானம் தரையிறங்கும் முன்பே இந்த தகவல் மும்பை விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் தயாராக வைக்கப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கிய உடனே மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினார்.

இதில் இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிப்பு நீடித்ததால் அவர்கள் விமான நிலையத்திலிருந்து மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவலை வெளியிட்டு இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக டெல்லியில் இருந்து ஜம்முவை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து வேறு விமானம் கொண்டுவரப்பட்டு பயணிகள் பத்திரமாக ஜம்முவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில பிராந்தியங்களின் மீது பறக்கும் போது இது போல ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு பிரச்சினையை சந்திப்பதாக தெரிவித்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+