இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி மாற்றம்..!!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் விரைவில் இஸ்ரேலை தாக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக வளாகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் பழிவாங்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி மாற்றம்..!!

இந்த நிலையில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் விமானச் சேவை நிறுவனங்கள் ஈரான் வான் பரப்பைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா உட்பட மேற்கத்திய விமான நிறுவனங்களான லுப்தான்சா போன்ற பல தற்போது புதிய வழித்தடங்களைப் பின்பற்றுகின்றன.

இதன் காரணமாக, இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பயண நேரம் சுமார் ஒரு மணிநேரம் அதிகரித்துள்ளது.

ஈரான் வான் பரப்பைத் தவிர்க்கும் வகையில் டெல்லி-டெல் அவீவ் இடையேயான தனது சனிக்கிழமை விமானத்தை இயக்கியுள்ளது ஏர் இந்தியா. மேலும், வாரத்திற்கு நான்கு முறை இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவது குறித்து முக்கிய ஆலோசனையில் இறங்கியுள்ளது ஏர் இந்தியா.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு டெல்லி-டெல் அவீவ் விமான சேவையை நிறுத்தியிருந்த ஏர் இந்தியா, கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு 2024 மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் இயக்கியது. தற்போது இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சம் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்கள் குறித்து ஏர் இந்தியா முடிவு செய்யவுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 161, ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து லண்டன் மீதான மாற்று வழித்தடத்தைப் பின்பற்றியது.

ஐரோப்பாவுக்குச் செல்லும் வழக்கமான இந்தியா-பாகிஸ்தான்-ஈரான்-துருக்கி-கருங்கடல் வழித்தடம் மாற்றாக, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் வடக்கு வழித்தடத்தைப் பின்பற்றியது. ரஷ்யா வான் பரப்பை இன்னும் ஏர் இந்தியா பயன்படுத்துவது கூடுதல் நன்மை.

இந்த வழித்தட மாற்றத்தால் ஏர் இந்தியாவின் ஐரோப்பிய நகரங்களுக்கான பயண நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான எரிபொருள் செலவும் அதிகரிக்கும். பயணிகள் கூடுதல் நேரம் மற்றும் பணத்தை விமானத்தில் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஏர்இந்தியா-வை போல் ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், மும்பைக்குச் செல்லும் தனது வழக்கமான வழித்தடத்தை மாற்றியுள்ளது. முன்பு கருங்கடல்-ஈரான்-பாகிஸ்தான் வழியாக மும்பைக்குச் சென்று வந்த விமானம், தற்போது கிரீஸ்-மத்தியதரைக்கடல்-சவுதி அரேபியா- பாரசீக வளைகுடா-அரபிக்கடல் வழியாகச் சென்று வருகிறது.

உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் விமான நிறுவனங்களின் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்ட வான்பரப்புகளின் (no fly zones) எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆரம்ப புள்ளிவைத்தது ஆப்கானிஸ்தான். தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வணிக விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான்பரப்பைத் தவிர்த்து வருகின்றன. இதை தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, பெரும்பாலான மேற்கத்திய விமான நிறுவனங்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யா வான்பரப்புகளை கடந்து செல்வதைத் தவிர்க்கின்றன.

ஈரான் மீதான அமெரிக்காவின் பதற்றம் காரணமாக, அமெரிக்க விமான நிறுவனங்கள் சிறிது காலமாக ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+