இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா-வை யாரும் வாங்க முன்வரவில்லையெனில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சேவை மற்றும் வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டு மொத்தத்தையும் இழுத்துப் பூட்ட வேண்டியிருக்கும் என ஏர் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
12 விமானங்கள்
ஏற்கனவே வர்த்தகத்தை அதிகளவில் குறைத்துவிட்ட ஏர் இந்தியா, தற்போது நிறுத்திவைக்கப்பட்ட 12 விமானங்களை இயக்க வேண்டும் என்றால் கூட நிதி இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
மத்திய அரசு முயற்சி
வாழ்வா சாவா என்ற நிலையில் மத்திய அரசு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்ய முடியுமா என ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 6 மாதத்திற்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க யாரும் வரவில்லை எனில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை தான் உருவாகும்.
இனி நிதி கிடையாது
கடந்த வருடம் வரையில் ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாகக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு போராடிய நிலையில் நாட்டின் போதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகப் பயணம், சுற்றுலா பயணம் செல்வதற்கான சூழலும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை. இதனால் ஒட்டுமொத்த விமானச் சேவையும் இந்த வருடம் பாதிக்கப்பட்டது.
இதில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் பாதித்து உள்ளது.
30,000 கோடி ரூபாய்
2012ஆம் ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே ஏர் இந்தியாவின் விமானச் சேவை மற்றும் வர்த்தகத்தை மீண்டு எடுப்பதற்காக 10 ஆண்டு திட்டத்தின் கீழ் 30000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2011-12ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் சுமார் 30,520.21 கோடி ரூபாய் அளவிலான நிதியை மத்திய அரசு இந்நிறுவனத்திற்கான வர்த்தகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு மறுப்பு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகம் விமானங்களை இயக்க தேவையான 2,400 கோடி ரூபாய் அளவிலான நிதியைக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மத்திய அரசோ ஏர் இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து 2400 கோடி எல்லாம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் 500 கோடி கொடுக்கிறோம் எனப் பதில் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மேலும் ஒரு விமான நிறுவனம் மூடப்படும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications