டாடாவின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுடனான முழுமையான இணைப்பிற்கு பின் விஸ்தாரா விமானம் தோஹாவிலிருந்து மும்பைக்கு அதன் முதல் விமான சேவையை துவக்கியது. ஏர் இந்தியா இணைப்புக்குபின், முதல் சர்வதேச விமானமான AI2286 உடன் செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏர் இந்தியா-விஸ்தாரா நிறுவனத்தின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு (திங்கட்கிழமை) புறப்பட்டது. AI2286 என்ற விமான குறியீட்டுடன் இயக்கப்படும் விமானம் தோஹாவில் உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க் கிழமை அதிகாலை மும்பையில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவுடன் இணைக்கப்பட்ட முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.

இணைப்புக்கு பின் உள்நாட்டுத் விமானத் துறையில், டாடாவின் முதல் திட்டமிடப்பட்ட விமானம் AI2984 செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இது ஏ320 என்ற விமானம் மூலம் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் போது பயணிகள் விஸ்தாரா விமானத்தை அடையாளம் காண உதவும் வகையில், இணைப்பிற்குப் பிறகு ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களுக்கு 'AI2XXX' குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
விமான கண்காணிப்பு இணையதளமான Flightradar24.com இன் தகவல்களின்படி, ஏ321 என்ற விமானம் மூலம் இயக்கப்படும் விமானம் தோஹாவிலிருந்து உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணியளவில் புறப்பட்டது. இந்த விமான பயண நேரத்திற்கான காலம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும்.
டாடா குழுமத்தின் இரு பகுதியான ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவின் இணைப்பு நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. விஸ்தாரா என்பது டாடாஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியாகும். இணைப்பிற்குப் பிறகு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும்.
புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் விஸ்தாரா நிறுவனம் டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் துவங்கப்பட்டது. இது கடந்த 2014 முதல் ஒரு தனி பிராண்ட் ஆக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது விஸ்தாரா நிறுவனம் ஏர் டாடாவின் இந்தியாவுடன் இணைந்து அதன் தனி பிராண்ட் அந்தஸ்தை இழக்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் முழு விமான சேவைகளின் எண்ணிக்கை ஆனது ஐந்திலிருந்து ஒன்றாக குறையும். இதன் மூலம், டாடா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைனஸ் 25000 கோடி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications