சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை பெரும் போராட்டத்திற்கு பின்பு டாடா குழுமம் வாங்கிய பின்பு பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது வாடிக்கையாளர் சேவை முதல் விமான சேவை வரையில் அதிகளவிலான மேம்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தில் இயங்கி வரும் 4 விமான சேவை நிறுவனங்களையும் இணைக்கும் முக்கியமான பணி தற்போது டாடா குழுமம் மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.
இதில் முக்கிய பகுதியாக ஏர் இந்தியா - விஸ்தாரா இணைப்பில் பெரும் பகுதி வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அன்னிய செலாவணி முதலீட்டுக்கு வெள்ளிக்கிழமை மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. டாடா குழுமம் ஏர் இந்தியா வாங்கிய பின்பு ஏர் இந்தியா, ஏர் இந்திய எஸ்க்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா என 4 பிராண்டுகள் உள்ளது. இதில் விஸ்தாரா என்பது டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனம்.

சிங்கப்பூர் நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான விளங்கும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், விஸ்தாராவில் 49% பங்கு வைத்துள்ளது. 2022 நவம்பரில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. டாடா குழுமம் விஸ்தாராவில் 51% பங்கு வைத்துள்ளது.
இணைப்பு நிறைவடைந்த பின்னர், சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவில் சுமார் 25.1% பங்கு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் காரணத்தால் இந்த முதலீட்டுக்கு மத்திய அரசின் அனுமதி தேவை.
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்பிற்குப் பல தரப்பட்ட ஒப்புதல்கள் இந்திய அரசு விதிமுறைகளுக்குக் கீழ் பெற வேண்டும், காரணம் டாடா-வுக்கு மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்கும் போதே சில முக்கியமான முறைகள் விதித்திருந்தது. இந்த விதிமுறைகளைத் தாண்டி வர்த்தக போட்டிதன்மை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) போன்ற பல அமைப்புகளின் அனுமதி பெற்று தற்போது FDI-க்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைந்து ஒரு முழு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனமாக உருவாகப்போகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications