காற்று மாசுபாடு மூலம் இந்திய நிறுவனங்களுக்கும், இந்திய வர்த்தகத்திற்கும் வருடம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்படுகிறது, இது கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தின் 3 சதவீத ஜிடிபி எனப் பயமுறுத்துகிறது டால்பெர்க் அட்வைசர்ஸ்-ன் ஆய்வறிக்கை.
இந்தக் காற்று மாசுபாடு என்பது நாட்டையும் நாட்டு மக்களையும் பல வகையில் பாதிக்கும், இந்தப் பாதிப்பு நேரடியாக வர்த்தகத்தையும் , வர்த்தக நிறுவனங்களையும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை அளித்துள்ளது.
சரி காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மக்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் என்ன பிரச்சனை.. வாங்கப் பார்ப்போம்.
காற்று மாசுபாடு ஆய்வறிக்கை
கிளீன் ஏர் பண்ட் மற்றும் CII அமைப்பு உடன் இணைந்து கன்சல்டிங்க் நிறுவனம் டால்பெர்க் அட்வைசர்ஸ் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்று மாசுபாடு மூலம் ஏற்படும் பிரச்சனைகளை விவரித்துள்ளது.
முக்கியப் பிரச்சனைகள்
காற்று மாசுபாடு மூலம் ஊழியர்கள் செயல்திறன் குறையும், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறையும், குறைந்த வயதில் இறப்பு, சொத்துச் சேமிப்பு குறையும், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிகச் செலவுகள் செய்ய வேண்டி வரும், மக்களின் நலன் கெடும். இவை அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்த்தகத்தையும், வர்த்தக அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றால் மிகையில்லை.
ஊழியர்கள் விடுமுறை
அவை அனைத்தையும் தாண்டி காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மூலம் ஊழியர்கள் வருடத்திற்கு 1.3 பில்லியன் நாட்கள் விடுமுறை எடுக்கும் நிலை உருவாக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்தியாவிற்குச் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஊழியர்களின் உற்பத்தித் திறன்
இதேபோல் காற்று மாசுபாடு மூலம் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும் போது அவர்களின் செயல்திறன், உற்பத்தி திறன் ஆகியவை பாதிக்கும். இதனால் உற்பத்தி பாதிப்பது மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் அதிக ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டி வரும் இதன் வாயிலாக மட்டும் சுமார் பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்படும்.
நுகர்வோர் சந்தை பாதிப்பு
மேலும் நுகர்வோர் சந்தையை எடுத்துக்கொண்டால் காற்று மாசுபாடு மோசமாக இருக்கும் போது வர்த்தகக் கடைகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் எனப் பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் இதனாலேயே ரீடைல் சந்தைக்கு வருடம் 22 பில்லியன் டாலர் அளவிலான வருமானம் பாதிக்கும் என இந்த ஆய்வறிக்கை.
7 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு
இப்படி ஒன்றின் பின் ஒன்றாகப் பிரச்சனைகள் உருவாகும் போது இந்தியாவில் வருடத்திற்கு 95 பில்லியன் டாலர் அதாவது சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பை ஏற்படும் நிலை உருவாகும் என டால்பெர்க் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications