2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் தொழில்துறை, உள்நாட்டு மற்றும் பிற இதர நிறுவனங்கள் நிலக்கரியை பயன்படுத்த கூடாது என நிலக்கரிக்கு தடை செய்து காற்று தர மேலாண்மை ஆணையம் CAQM (The Commission for Air Quality Management) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், அனல் மின் நிலையங்களில் குறைந்த கந்தக நிலக்கரியை பயன்படுத்தலம் என தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி - என்சிஆர் பகுதியில் தொழில்துறை பயன்பாடுகளில் ஆண்டுதோறும் சுமார் 1.7 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. ஆறு முக்கிய தொழில்துறை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நிலக்கரி
ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், நிலக்கரி பயன்படுத்துவதற்கான தடை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் PNG உள்கட்டமைப்பு மற்றும் விநியோகம் உள்ள பகுதிகளிலும், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் PNG விநியோகம் இல்லாத பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்று CAQM தெரிவித்து இருந்தது.
டெல்லி-என்.சி.ஆர்
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டெல்லி - என்சிஆர் முழுவதும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொது மக்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றே இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு
டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் நடந்த பல்வேறு கட்ட ஆலோசனையில் நிலக்கரியை தடை செய்வது தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளை பரிந்துரை செய்யவும், இதுகுறித்து ஆய்வு செய்யவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
நிபுணர் குழு
இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் 'நிலக்கரி போன்ற அதிக மாசுபடுத்தும் எரிபொருட்களை படிப்படியாக அகற்றவும், முடிந்தவரை தூய்மையான எரிபொருட்களை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.
தடை
டெல்லியில் நாளுக்குநாள் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை தொழில்துறையினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் முழு ஆதரவு தர வேண்டும் என்றும் CAQM கேட்டு கொண்டுள்ளது. மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் வருவதை அடுத்தே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் CAQM தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications