இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் விமான சேவை வழங்கும் கம்பெனிகள் எல்லாமே, நாலு காசை லாபமாக பார்ப்பதற்குள், படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா வந்த பின், விமான சேவை நிறுவனங்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது அந்த பிரச்சனை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போல, விமான எரிபொருள் விலையை வேறு உயர்த்தி இருக்கிறார்கள்.
விலை ஏற்றம்
விமானங்களில், ஏர் டர்பைன் ஃப்யூயல் என்று சொல்லப்படும் ATF எரிபொருளைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த எரிபொருளின் விலையை, எண்ணெய் மார்க்கெட்டிங் கம்பெனிகள், சுமார் 48 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறார்களாம். அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டருக்கு) சுமாராக 11,000 ரூபாய் அதிகரித்து இருக்கிறார்களாம்.
நகரங்களில் விமான எரிபொருள் விலை
எனவே இனி விமானங்கள், டெல்லியில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு கிலோ லிட்டருக்கு 33,575 ரூபாய் செலுத்த வேண்டுமாம். மும்பையில் விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 33,070 ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். கொல்கத்தாவில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் விலை 38,543 ரூபாய்க்கு விற்கப்படுமாம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
ஏற்கனவே விமான சேவை நிறுவனங்கள் தங்களின், வியாபாரத்தில் லாபம் பார்க்க முடியாத படிக்கு "நடு சீட்டை காலியாக விடுவது" அல்லது கொரோனா பரவாமல் இருக்கும் விதத்தில் "பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பது" போன்ற செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு மத்தியில் எரிபொருள் விலை ஏறினால், குண்டைத் தூக்கி போட்டது போலத் தானே இருக்கும்.
பயணிகள் எண்ணிக்கை
கடந்த 31 மே 2020 அன்று, இந்தியாவில் 501 விமானங்களை இயக்கி இருக்கிறார்களாம். அதில் மொத்தம் 44,593 பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்களாம். ஆக சுமாராக 180 பேர் பயணிக்க வேண்டிய விமானங்களில் சுமாராக 100 பேர் கூட பயணிக்கவில்லை. ஆக பயணிகள் எண்ணிக்கையும் போதுமான படிக்கு இல்லை.
பாவம் விமான சேவை கம்பெனிகள்
1. பயணிகள் எண்ணிக்கை பழைய படி இல்லை.
2. பயணிகள் பாதுகாப்புக்கு நடு சீட்டை விடுவது (அ) பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுப்பது கூடுதல் செலவு.
3. இப்போது விமான எரிபொருள் விலை ஏற்றம்... இப்படி சுற்றி சுற்றி அடித்தால் விமான சேவை கம்பெனிகள் என்ன தான் செய்வார்கள். எப்போது லாபம் பார்ப்பார்கள்? எல்லாம் கம்பெனிக்கு தான் வெளிச்சம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications