விமான போக்குவரத்து சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வருவது மட்டும் அல்லாமல் மலிவான கட்டணத்தில் கிடைக்கும் காரணத்தால் விமானத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவிலும் frequent flyer அதாவது அதிகமாக விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதிய வாடிக்கையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் திட்டத்துடன் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர்ஏசியா இந்தோனேசியா, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

ஏர்ஏசியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு இருந்தது, ஆனால் அதை டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில் தற்போது ஏர்ஏசியா இந்தோனேசியா முக்கியமான விரிவாக்கத்தைச் செய்ய உள்ளது. ஏவியேஷன்ஏ2Z வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தோனேசிய நாட்டின் முக்கிய நகரங்களை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது ஏர்ஏசியா இந்தோனேசியா.
இந்தியாவில் இருந்து இந்தோனேஷியா நாட்டிற்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இணைப்புத் தேவையை வர்த்தகமாக மாற்ற முடிவு செய்துள்ளது ஏர்ஏசியா இந்தோனேசியா.
இத்திட்டத்தின் முதல் படியாக ஜகார்த்தா - சென்னை மற்றும் பாலி - கொல்கத்தா மத்தியிலான விமானச் சேவையைத் துவங்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் சமீபத்தில் இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம் தான். இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையேயான நடப்புறவை மேம்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. இதில் விமானப் போக்குவரத்து முக்கிய துறையாக உருவெடுத்துள்ளது.
இந்தியா - இந்தோனேஷியா நாடுகள் மத்தியில் வாரத்திற்கு 28 விமானங்கள் என்ற முந்தைய கட்டுப்பாடு, இருக்கை அடிப்படையிலான திறன் அமைப்பு மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 9,000 பேருக்கு விமானச் சேவை அளிக்க முடியும்.
இந்த புதிய கட்டமைப்பு மூலம், சராசரியாக 180 இருக்கைகள் கொண்ட narrow-body aircraft-ஐ பயன்படுத்தி, தோராயமாக வாரத்திற்கு 50 விமானங்களை ஒரு வழிப் பயணத்தில் இயக்க முடியும். இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துத் தான் ஏர்ஏசியா இந்தோனேசியா நிறுவனம் ஜகார்த்தா - சென்னை மற்றும் பாலி - கொல்கத்தா மத்தியிலான விமானச் சேவையைத் துவங்கத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications