உலகளவில் பிரபலமான ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான Airbnb மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து 2வது சுற்று பணிநீக்கத்தை அறிவித்து வருகிறது. இதனால் டிஜிட்டல் மற்றும் டெக் சேவையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
Airbnb நிறுவனம் முதல் பணிநீக்க சுற்றில் அனைத்து பிரிவுகளிலும் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆனால் இந்த முறை ஆட்சேர்ப்பு ஊழியர்கள் அதாவது recruiting பிரிவில் மட்டுமே சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
2022 இல் Airbnb வருவாயில் வளர்ச்சியைப் பதிவு செய்த நேரத்திலும் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஹாஸ்பிடாலிட்டி பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Airbnb நிறுவனம்
Airbnb நிறுவனத்தின் நிகர வருமானம் இப்போது 1.9 மில்லியன் டாலர்களாக உள்ளது. Airbnb தளத்தில் தற்போது சுமார் 6800 பணியாளர்கள் உள்ளனர் மற்றும் சமீபத்திய பணிநீக்கம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் வெறும் 0.4 சதவீத ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பணிநீக்கம்
பிப்ரவரி மாதம், Airbnb நிறுவனம்2023 இல் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், Airbnb பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக இப்போது Bloomberg தெரிவித்துள்ளது, இதோடு இந்நிறுவனத்தின் பணியமர்த்தும் ஊழியர்களில் சுமார் 30 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது.
செயல்திறன்
கடந்த மூன்று ஆண்டுகளில் Airbnb நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிப்பதில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் இடத்தில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள காலக்கட்டத்தில் முக்கியமான சந்தையிலும், பிரிவுகளிலும் புதிய ஊழியர்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று காலம்
ஊழியர்கள் எண்ணிக்கையை 2023ல் அதிகரிப்பது குறித்து Airbnb செய்தித் தொடர்பாளர் உறுதி அளித்துள்ளார். கொரோனா தொற்று நோய் காலத்தில் Airbnb மோசமான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் Airbnb மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஹாஸ்பிடாலிட்டி பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது.
1900 ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்த காரணத்தால் வர்த்தகம் 90 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு வருவாய் அளவில் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. இக்காலக்கட்டத்தில் ஏறக்குறைய 1900 ஊழியர்கள் Airbnb நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதமாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications