பொதுவாக பண்டிகை காலங்கள், விடுமுறைகள் போன்றவற்றிற்கு விமான கட்டணங்கள் உயர்வது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் முக்கியமான நகரங்களில் இருந்து செல்லும் விமானங்களின் கட்டணம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே போல ஓணம் பண்டிகைக்காக கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களின் கட்டணமும் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 12-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. எனவே கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரையில் விமானக் கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதன்படி மும்பையிலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் விமான டிக்கெட் கட்டணம் 21 சதவீதம் அதிகரித்து 5,162 ரூபாயாக உள்ளது. அதேபோல மும்பையிலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 19 சதவீதம் அதிகரித்து 5,999 ரூபாயாக உள்ளது. டெல்லியில் இருந்து கோவா வரை மற்றும் டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணமும் 19% அதிகரித்து 4,930 ரூபாயாக உள்ளது.
அது மட்டுமின்றி மற்ற சில வழித்தடங்களிலும் விமான கட்டணம் 1 முதல் 16 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ixigo குழுமத்தின் இணை-தலைமை நிர்வாக அதிகாரி ரஜ்னிஷ் குமார் கூறுகையில், தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணமும் அதிகரித்துள்ளது.
டெல்லி-சென்னை, மும்பை-பெங்களூரு மற்றும் டெல்லி-ஹைதராபாத் போன்ற பிரபலமான வழித்தடங்களில் சராசரியாக ஒரு வழி விமானக் கட்டணம் ரூ. 4,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிப்பு என்று கூறியுள்ளார்.
விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் சில வழித்தடங்களில் 1 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டும் உள்ளன. அந்த வகையில் மும்பை-அகமதாபாத் விமானத்திற்கான டிக்கெட் விலை 27 சதவீதம் குறைந்து ரூ.2,508 ஆகவும், மும்பை-உதைபூர் விமானத்தின் டிக்கெட் விலை 25 சதவீதம் குறைந்து ரூ.4,890 ஆகவும் உள்ளது.
பெங்களூரு-ஹைதராபாத் விமானத்தைப் பொறுத்தவரை, கட்டணம் 23 சதவீதம் குறைந்து ரூ.3,383 ஆகவும், மும்பை-ஜம்மு விமானத்திற்கான கட்டணம் 21 சதவீதம் குறைந்து ரூ.7,826 ஆகவும் உள்ளது.
கேரளாவில் வரும் ஓணம் பண்டிகைக்காக சில வழித்தடங்களில் விமான கட்டணம் 1 முதல் 25 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சில வழித்தடங்களில் 6 முதல் 35 சதவிகிதம் வரை கட்டணம் குறைந்துள்ளது.
ஹைதராபாத்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் கட்டணம் 30 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,102 ரூபாயாக உள்ளது. இதேபோல், மும்பை-காலிகட் வழித்தடத்திலும் கட்டணம் 30 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,448 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் பெரும் கவலை எழுந்துள்ளது. தேவையற்ற கட்டண உயர்வு காரணமாக மக்கள் கஷ்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு மக்களவையில் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications