நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களுக்கு புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. மத்திய அரசுக்கு இந்த திட்டத்திற்கான கோரிக்கைகள் வந்துள்ளதாக சிவில் விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமான நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய 10 மாநில அரசுகளிடம் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி அன்று, 22 விமான நிலையங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 10 மாநில அரசுகள் முன் வைத்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இணையமைச்சர் முரளிதர் மொஹோல், லோக்சபாவில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ பதிவில், பெரும்பாலான விமான நிலையங்களுக்கு அவை அமைந்துள்ள நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன என்று கூறியுள்ளார்.

ஒரு மாநில அரசு விமான நிலையத்திற்கு புதிய பெயர் சூட்ட விரும்பினால், அந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அவை அனுப்பப்படும். ஆனால் அந்த செயல்முறைக்கு முன்பு மற்ற துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் சேர்ந்து கலந்தோசித்து மதிப்பாய்வை பெற வேண்டும்.
மறுபெயரிடப்படும் விமான நிலையங்களின் பட்டியல்:
ஆந்திரப்பிரதேசம்: திருப்பதி விமான நிலையத்தை "ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். மேலும் 3 விமான நிலையங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
பீகார்: தர்பங்கா விமான நிலையத்திற்கு "வித்யாபதி விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹரியானா: ஹரியானாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள 4 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம்: ஒரு விமான நிலையத்திற்கு புதிய பெயர் கோரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா: ஷீரடி விமான நிலையத்தை "ஸ்ரீ சாய்பாபா சர்வதேச விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த விமான நிலையம் உட்பட 5 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
மணிப்பூர்: மணிபூரியில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கூறி உள்ளனர்.
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்தரகாண்ட்: இந்த மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.
உத்தரபிரதேசம்: நான்கு விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த மாற்றங்கள் விமான நிலையங்களின் அடையாளத்தை மாற்றுவதோடு, அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. இருப்பினும், இந்த பெயர் மாற்றங்கள் பயணிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் பெயர் மாற்றம் செய்ய இருக்கும் புதிய விமான நிலையங்களின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications