தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிக்கு மத்தியில், பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக நிதி திரட்டல், கட்டண அதிகரிப்பு, அரசின் ஒத்துழப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் ஓரளவுக்கு தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் 5ஜி சேவை குறித்தான பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. இது தொலைத் தொடர்பு துறையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் ஒரு வழியாக உள்ளது.
நிதி திரட்டும் முயற்சி
பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இந்த போட்டிகளை சமாளிக்க நிறுவனங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன, அந்த வகையில் பார்தி ஏர்டெல் (Bharti airtel) நிறுவனமும் கடும் சவாலான நிலைக்கு மத்தியில், நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கூகுள் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.
சிசிஐ அனுமதி
இம்மாத தொடக்கத்தில் தான் கூகுள் - ஏர்டெல் முதலீட்க்கு இந்திய போட்டி ஆணையம் (CCI)யிடம் அனுமதி அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம், டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பினை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல வருட வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக அளிக்க உள்ளது. இதே 700 மில்லியன் டாலர்களை ஈக்விட்டி முதலீடு மூலம் முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
என்ன திட்டம்?
பார்தி ஏர்டெல் - கூகுள் கூட்டணி மூலம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை, இதர டெலிகாம் சேவைகளை வழங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கிளவுட் சேவையை மேம்படுத்துவதிலும் ஏர்டெல், கூகுள் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் முடியலாம்
ஏர்டெல், கூகுள் ஒப்பந்தம் விரைவிம் வெற்றிகரமாக முடிவடையலாம் என்றும், 1 பில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம், ஏர்டெல்லில் 1.2% பங்கினை கூகுள் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை 2020ல் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 7.73% பங்கினை ஜியோ நிறுவனத்தில் கையகப்படுத்துள்ளது. தற்போது ஏற்டெல்லிலும் கணிசமான பங்கினை வாங்கவுள்ளது.
More From GoodReturns

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications