இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.

தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை படிப்படியாக நீக்கி வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வேறு வழி இல்லாமல் கூடுதல் கட்டணத்திற்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய 189 ரூபாய் மதிப்பிற்கான வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் பிளானை திடீரென நீக்கி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான பட்ஜெட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த ஒரு ரீசார்ஜ் திட்டம் தான் இந்த 189 ரூபாய் ரீசார்ஜ் பிளான். இணைய வசதி தேவையில்லை, வாய்ஸ் கால் வசதி மட்டும் இருந்தால் போதும் என இருந்த வாடிக்கையாளர்கள் , குறிப்பாக வயதானவர்கள் பட்டன் போன் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் பயன்படுத்திய 189 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் தான் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.
எனவே தற்போது ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 199 ரூபாயாக இருக்கிறது . இதுநாள் வரை 189 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி இந்த 199 ரீசார்ஜ் திட்டத்தை தான் பயன்படுத்தியாக வேண்டும். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மொத்தமாக 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதிகள் இருக்கின்றன.
ஏர்டெல் , ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வெளிப்படையாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் இப்படி பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்குவதன் மூலம் வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளர்களை அதிகபட்ச தொகை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி தள்ளுகின்றன. அப்படி ஒரு நடவடிக்கை தான் இது.
குறிப்பாக டேட்டா வழங்கக்கூடிய பிளான்களை அடிப்படையாகக் கொண்டு வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அனைத்தையும் இந்த தனியார் தொலைதொடர்வு சேவை நிறுவனங்கள் நீக்கி வருகின்றன. அண்மையில் தான் ஏர்டெல் ,ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களை 15 லிருந்து 20% வரை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதனை வெளிப்படையாக மேற்கொள்ளாமல் இப்படி சைலண்டாக நடைமுறைக்கு கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications