5ஜி சேவை அறிமுகம் செய்ய ரெடி, தமிழ்நாடுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்: பார்தி ஏர்டெல் முக்கிய அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நாடு முழுவதும் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிக்கத் தயார் எனவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகக் கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கியுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இதன் படி கர்நாடக மாநிலத்திற்குக் கூடுதலாக 11.2 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும், தமிழ்நாட்டில் 5 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும் கூடுதலாகச் சேர்த்துள்ளது.

5ஜி சேவை அறிமுகம் செய்ய ரெடி, தமிழ்நாடுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்: பார்தி ஏர்டெல் முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் யார் முதலில் 5ஜி சேவையை மிகவும் திறம்பட அமல்படுத்த போது என்பதில் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் மத்திய அரசு தனது 5ஜி சேவைகளை அதிதீவிரமாகச் சோதனை செய்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் 3.03 கோடி டெலிகாம் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ள ஏர்டெல் ஒறு புறம் 5ஜி சேவையை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் மறுப்புறம் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தரமான சேவை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் புதிய அலைக்கற்றைச் சேர்த்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 5ஜி சேவை அறிமுகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் மாபெரும் வெற்றி அடைந்த ரிலையன்ஸ் 5ஜி சேவையில் என்ன செய்யப்போகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel says ready for 5G in India; deploys additional spectrum in Karnataka, Tamil Nadu

Airtel says ready for 5G in India; deploys additional spectrum in Karnataka, Tamil Nadu
Story first published: Tuesday, May 25, 2021, 20:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X