இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா, உலக வங்கியின் தலைவராக இன்று முதல் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டிலும் தலைவர் பதவியை வகித்த முதல் வேற்று நிற நபர் அஜய் பங்கா.
இங்கு நிறம் குறித்து பேச முக்கிய அவசியமும் உள்ளது, இதுவரையில் உலக வங்கி மற்றும் IMF அமைப்புகளில் அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களை தாண்டி வேறு நாட்டவரை தலைவர் பதவியில் நியமித்தது கிடையாது. இது வரலாற்று சாதனை விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கியின் தலைவரா அஜய் பங்கா இருக்கப்போகிறா, இவருடைய நியமனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரையின் பெயரில் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட மே 3 அன்று அறிவிக்கப்பட்டது.
உலக வங்கியின் முன்னாள் தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக அறிவித்த பின்பு, சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த நிலையில் தான் அமெரிக்க அரசு ஜோ பைடன் பரிந்துரை செய்தது.
பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். உலக வங்கியின் தலைவர் பதவியில் அமரும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை அஜய் பங்கா பெற்றுள்ளார் அஜய் பங்கா.
உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் அஜய் பங்கா. சொல்லப்போனால் பார்சூன் 500 நிறுவனத்தின் பல நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓ-வாக இருந்தாலும், அனைத்திற்கும் முன்னோடி அஜய் பங்கா தான்.
இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-விற்குத் தற்போது 63 வயதாகிறது. மாஸ்டர்கார்டு நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய நிலையில் தற்போது உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி முதலீட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications