மும்பை: தனலட்சுமி வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (MD & CEO) அஜித் குமார் கே.கே. என்பவரை நியமித்தது இவ்வங்கியின் நிர்வாகம். இந்நிலையில் அஜித் குமாரின் நியமனத்தை ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தனலட்சுமி வங்கியை வழிநடத்துவார். இதற்கு முன்னதாக ஜே.கே. ஷிவன் அவர்கள் இப்பதவியில் இருந்தார்.

ஃபெடரல் வங்கியில் தற்போது தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக (chief human resources officer) பணியாற்றி வரும் கே.கே. அஜித் குமார்-க்கு வங்கித் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
கடன் வழங்குதல், மனிதவள மேம்பாடு, வியாபார மேம்பாடு மற்றும் கிளை வங்கி மேலாண்மை என பல்வேறு துறைகளில் இவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
ஜே.கே.ஷிவன் அவர்களது பதவிக்காலம் ஜனவரி 29, 2024 அன்று முடிவடைந்தது. எனினும், புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்கும் வரை நீங்கள் தொடர்ந்து பணியாற்றுமாறு ரிசர்வ் வங்கி அவரிடம் கேட்டுக் கொண்டது. அதன்படி, அவர் தற்போது வரை பதவியில் நீடித்து வருகிறார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக தனலட்சுமி வங்கி திகழ்ந்து வருகிறது. கேரள மாநிலம், திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வங்கி, 97 ஆண்டுகால சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியா முழுவதும் 261 கிளைகளையும், 282 ஏடிஎம்/சிடிஎம் (ATM/CDM) களையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை வழங்கி வருகிறது.
வங்கித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் குமார் கே.கே. அவர்களது தலைமையில் தனலட்சுமி வங்கி எவ்வாறு செயல்படும் என்பது குறித்து வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது போன்ற துறைகளில் இவர் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
கே.கே.அஜித் குமார் நியமனத்தைத் தொடர்ந்து, தனலட்சுமி வங்கியின் பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று 1.37 சதவீத உயர்வுடன் ₹44.40க்கு மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தை முடித்தன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications