கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தொடங்கப்பட்ட புதிய விமான நிறுவனமான ஏர் ஆகாசா நிறுவனம் தற்போது புதுப்புது விமானங்களை இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே.
மேலும் இந்த விமான நிறுவனம் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு பல நல்ல வசதிகளை செய்து வருவதால் குறுகிய காலத்தில் பயணிகள் மத்தியில் பிரபலமாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சலுகையாக செல்லப்பிராணிகளையும் விமானத்தில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் ஆகாசா விமானம்
பல விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை அனுமதிப்பதில்லை என்பதால் பணக்காரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடன் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் ஆகாசா விமான நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் செல்லப்பிராணிகளை சரக்கு கேபினில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்லப்பிராணிகளுக்கு அனுமதி
இதுகுறித்து ஏர் ஆகாசா விமான அதிகாரி ஒருவர் கூறியபோது, 'வரும் நவம்பர் மாதம் முதல் வளர்ப்பு நாய்கள், பூனைகள் ஆகியவை எங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம் என்றும் இது தொடர்பான முன்பதிவுகள் அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூண்டில் செல்லப்பிராணிகள்
மேலும் ஒவ்வொரு செல்ல பிராணிகளும் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கூண்டில் அடைக்கப்பட்ட செல்லப்பிராணியின் எடை உள்பட ஒருசில சோதனை செய்யப்படும் என்றும் 32 கிலோ வரையிலான செல்லப்பிராணிகள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
கொள்கை
மேலும் செல்லப்பிராணிகள் பயணம் செய்வதற்கான கொள்கை விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டும் என பல பயணிகள் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம்
மேலும் செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்லும் முன் அதன் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் ஆகாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications