இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம், ஜூலை மாதம் முதல் தனது வணிக செயல்பாட்டினை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர் ஆப்ரேட்டர் அனுமதியினை தவிர மற்ற அனுமதிகளையும் பெற்றுவிட்டதாகவும், அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான சேவையை வழங்கவுள்ளதாக ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கூறியிருந்த நிலையில், விரைவில் இந்த விமான நிறுவனம் விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்களுக்கு ஆர்டர்
இந்த விமான சேவைகளை வழங்குவதற்காக ஆகாசா நிறுவனம் 77 போயிங்க் 737 மேக்ஸ் விமானங்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் ஆர்டரினை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போதைக்கு 150 விமானிகளும், 120 விமான பணிப்பெண்களும் உள்ளனர்.
எப்போது விமானம் கிடைக்கும்?
இது குறித்து ஆகாசா ஏர்-ன் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான வினய் துபே, சிஎன்பிசி டிவிக்கு அளித்த பேட்டியில், ஜூன் நடுப்பகுதியில் எங்களுக்கான முதல் விமானம் டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இதனையடுத்து எங்களது விமான சேவையினை ஜூலை மாத இறுதியில் வணிக ரீதியாக செயல்பட தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கெங்கு செயல்பாடு?
விமான ஆப்ரேட்டரின் அனுமதியினை பெறுவதற்கு முன்பு, நாங்கள் விமான டெலிவரியை பெற வேண்டும். இது மிகவும் கடுமையான செயல்முறையாகும். ஆக ஜூன் மாதம் அது எங்களுக்கு கிடைக்கலாம். ஜூலையில் செயல்படத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.
யாருக்கு எவ்வளவு பங்கு?
இந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இணை இயக்குநரும், நிறுவனத்தின் 40% உரிமையாளரும் ஆவார். இண்டிகோவின் முன்னாள் தலைவரான ஆதித்யா கோஷ் ஆகாசா ஏர் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் துபே 15 சதவீத பங்குகளுடன் ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிப்பார் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications