பிரிட்டன் நாட்டு பிரதமர் ரிஷி சுனக் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மகள் அக்ஷதா மூர்த்தி-க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது. ரிஷி சுனக் பிரதமராகும் முன் அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்கிறார் என புகார்கள் எழுந்தது, ரிஷி சுனக் பிரதமரான பின்பு இன்போசிஸ் வாயிலாக ரஷ்யாவில் இருந்து வருமானம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதேபோல் அக்ஷதா மூர்த்தி முதலீடு செய்துள்ள நிறுவனத்திற்கு (KORU KIDS) பிரிட்டன் அரசின் திட்டங்கள் கிடைத்தது அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை அக்ஷதா மூர்த்தி பெறுகிறார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்ட அக்ஷதா மூர்த்தி அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

Akshata Murty இந்த வாரம் பிரிட்டன் நாட்டின் நிறுவனங்கள் அமைப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் அவர் துவங்கிய கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தின் வாயிலாக செய்த முதலீட்டை திரும்ப பெற்று இந்நிறுவனத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளார். Akshata Murty பிரிட்டன் நாட்டின் முதன் பெண்மணி மட்டும் அல்லாமல் பிஸ்னஸ்வுமென் ஆகவும் உள்ளார்.
சொல்லப்போனால் கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தை அக்ஷதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக் இணைந்து தான் 2013ல் துவங்கினர். இந்த நிறுவனத்தில் ரிஷி சுனக் ஒரு டைரக்டர் ஆக இருந்தார், ஆனால் இந்த பதவியை 2015ல் முழு நேர அரசியலில் பங்கு பெறும் திட்டத்துடன் ராஜினாமா செய்தார். இதன் மூலம் தற்போது வரையில் அக்ஷதா மூர்த்தி மட்டுமே டைரக்டராக உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி வைத்துள்ள பங்குகள் மற்றும் அதன் டிவிடென்ட் தொகையை அடிப்படையாக வைத்து கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனம் துவங்கப்பட்டு ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தின் மொத்த நிதி மதிப்பீடாக 4.6 பில்லியன் பவுண்ட் ஆக மதிப்பிடப்படும் வேளையில் முதலீட்டு மதிப்பு 3.8 பில்லியன் பவுண்ட் ஆக மதிப்பிடப்பட்டு உள்ளது.
அக்ஷதா மூர்த்தி முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் மூலம் பெரிய அளவிலான லாபமும் வரவில்லை, இதேபோல் கட்டமரான் வென்சர்ஸ் முதலீட்டை பெற்ற Mrs Wordsmith, The New Craftsmen, Digme Fitness ஆகியவை அடுத்தடுத்து 3 வருடத்தில் மூடப்பட்டது.
Study Hall, Koru Kids போன்ற கட்டமரான் வென்சர்ஸ் முதலீட்டை பெற்ற நிறுவனங்கள் பிரிட்டன் நாட்டு அரசு உதவிகள் பெற்ற நிலையில் இது பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இது ரிஷி சுனக்கிற்கு பெரும் தலைவலியாக மாறிய நிலையில் இந்த நிறுவனங்களை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளார் அக்ஷதா மூர்த்தி. இது இவருடைய வர்த்தக பயணத்தில் பெறும் பின்டைவாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications