இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்தில் 70 மணி நேர வேலை செய்வதை வலியுறுத்தி, இந்தியாவின் இளைஞர்களை தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்குமாறு கூறியதற்காக சில காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.
அவரது இளமைக்காலத்தில் நாராயண மூர்த்தி இவ்வாறே வேலை பார்த்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கும் தெரியும்.

நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் சேர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஆன் அன்காமன் லவ்: தி இயர்லி லைப் ஆப் சுதா அண்டு நாராயண மூர்த்தி என்ற நூலை வெளியிட்டனர்.
அதில் தங்களது குடும்பத்தை வளர்ப்பதற்கு பட்ட சிரமங்களையும் இன்போசிஸ் நிறுவனத்தை வழிநடத்தியதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இன்போசிஸ் இன்றைக்கு நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது.
இன்றைக்கு மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நாராயண மூர்த்தி எவ்வளவு அர்ப்பணிப்போடு பாடுபட்டு வளர்த்தார் என்ற விவரம் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
அதேவைளையில் தங்களது பிள்ளைகளான அக்ஷதா மூர்த்தி, ரோஹன் ஆகியோரை சுதா மூர்த்தி எப்படி சிறப்பாக வளர்த்தார் என்பதையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதில் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா தனது தந்தையின் இருப்பு இல்லா விரக்தியில் அவருடன் சண்டையிட்ட தருணம் பற்றி கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உண்மையான தந்தை தனது தாத்தா என்று குறிப்பிட்டார். நாராயண மூர்த்தியை தனது போனஸ் தந்தை என்று குறிப்பிட்டார்.
நாராயண மூர்த்தியின் மகனும் அவருடன் சண்டையிட்டார். யாரை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள்? என்னையா, அக்ஷதாவையா அல்லது இன்போசிஸ்ஸையா என்று துணிச்சலுடன் கேட்டார். ஆனால் மகனுக்கு ஆச்சரியம் தரும் வகையில் நாராயண மூர்த்தி, இருவரையும் சமமாக விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
சமீபத்தில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து இளம் தொழிலாளர்களின் கோபத்தை இந்த அறிக்கை எதிர்கொண்டது.
77 வயதான ஐஐடி பட்டதாரி ஒரு நேர்காணலில் இளைஞர்களுக்கான வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்வது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று கூறினார். அத்துடன் தான் வேலை செய்யும் போது வாரத்துக்கு 6 நாட்களும் 70 மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்ததாகவும் இதனால் பல்வேறு பயன்களை அடைந்ததாகவும் நாராயண மூர்த்தி கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications