இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும் அவரது குடும்பத்தினரும் தீபாவளியைக் கொண்டாடிய போட்டோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தாண்டி அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஒரு நெக்லஸ் பற்றித் தான் மொத்த இந்தியாவும் பேசி வருகிறது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இருவரும் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது ரிஷி சுனக் பதவியேற்றி நாளில் இருந்து அவரது வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வைத்து புரிந்துகொண்டோம். ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் இந்திய பணத்திலும் பல கோயில்களுக்குச் சென்றனர்.

இன்த நிலையில் இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியின் போது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் அக்ஷதா மூர்த்தி மற்றும் இரு பிள்ளைகளும் இந்திய உடையில் தீபத்தை ஏற்றி கொண்டாடினர்.
இப்போது அக்ஷதா மூர்த்தி நீல நிற சேலையில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் மகிமையை உலகளவில் கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு நெக்லஸ் அணிந்திருந்தார். இந்தப் புகைப்படம் தான் தற்போது மொத்த கர்நாடக மக்களும் பேசி வருகின்றனர்.

இங்கிலாந்தின் முதல் பெண்மணியான அக்ஷதா மூர்த்தி மைசூரு பட்டுப் புடவை மற்றும் கந்தபெருண்டா நெக்லஸ்-ஐ அணிந்திருந்தார். கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது இந்து புராணங்களில் இரண்டு தலைகள் கொண்ட பறவை மற்றும் இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது.

இந்தக் கந்தபெருண்டா தென்னிந்தியாவைக் குறிப்பாக அக்ஷதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவை ஆண்ட பல பேரரசுகளின் அதிகாரப்பூர்வ சின்னமாகப் பயன்படுத்தினர். மேலும் இது கர்நாடக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. கர்நாடக மாநில பெருமையைத் தற்போது பிரிட்டன் அதிகாரத்தின் உச்சத்தில் அடைந்துள்ளது எனப் பலரும் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் தீபாவளி கொண்டாட்டத்தில் பல அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கலந்துக்கொண்டனர். இவருவரின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெய்சங்கர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விநாயகர் சிலை ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications