இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அட்சய திருதியை அன்று நகை வாங்குவது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று தரும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் நம்பிக்கை. அன்றைய தினம் நீங்கள் வாங்கும் தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் என்றுமே குறையாமல் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
இதனால்தான் மக்கள் கூட்டம் அட்சய திருதியை நாளன்று நகைக்கடைகளில் அலைமோதும். அன்றைய தினம் தங்கள் வாழ்நாளில் செல்வத்தை வரவேற்க பலர் தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அட்சய திருதியை 2025: திரிக் பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு அட்சய திருதியை புதன்கிழமை ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று வருகிறது. அட்சய திருதியை பூஜை செய்வதற்கான நல்ல நேரம் காலை 5.41 மணி முதல் பிற்பகல் 12.18 மணி வரை மொத்தம் 6.37 மணி நேரம். அட்சய திருதியை திதி ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று மாலை 5.31 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 30 பிற்பகல் 2.12 மணி வரை இருக்கிறது.
விஷ்ணு பகவானுக்கு பிடித்த தினமாக அட்சய திருதியை இருந்து வருகிறது. அதோடு விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம ஜெயந்தியும் அன்றைய தினம் தான் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை என்பதன் பொருள் என்ன?: ஆட்சியை என்ற சொல்லுக்கு "நீண்ட" என்பது பொருள். அதாவது என்றுமே அழியாதது என்றும் வைத்துக் கொள்ளலாம். திருதியை என்பது வளர்பிறையின் மூன்றாம் நாளை குறிக்கிறது. இந்த நாளில் செய்யப்படும் மங்களகரமான செயல்கள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளில் மக்கள் என்னென்ன செய்யலாம்?: பெரும்பாலும் புதிய தொழிலை தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்கும். அதே போல புதிதாக வேலையில் சேர்ந்தாலும் அன்றைய தினம் வேலையை தொடங்கலாம். விவசாயம், புது வீடு குடிபோதல், பிற புதிய தொடக்கங்கள் அனைத்திற்கும் அட்சய திருதியை ஏற்ற நாள். இந்த நாளில் மக்கள் பிரார்த்தனை செய்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். அதேபோல சிறப்பு பூஜைகளையும் நடத்தலாம். தர்மம் செய்வதற்கும் அன்றைய தினம் ஏற்ற நாள். எனவே ஏழை எளியவருக்கு உணவு, உடை தானம் வழங்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications