2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Layoffs.fyi என்ற தளம் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த செய்திகளை பின்தொடர்ந்து வருகிறது.
இந்த இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு தொடங்கியிலிருந்து தற்போது வரை 300க்கும் அதிகமான தொழில் நுட்ப நிறுவனங்கள் 98,834 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளன.

குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெடா உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் அடக்கம். மே மாதத்தில் மட்டும் 39 நிறுவனங்கள் 9,742 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி இருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
குறிப்பாக கூகுள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் தங்களுடைய கோர் டீமிலிருந்து 200 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. குறிப்பாக கலிபோர்னியாவில் வேலை செய்து வந்த பல்வேறு பொறியாளர்கள் தங்களது வேலைகளை இழந்து இருக்கின்றனர்.
நிறுவனத்தை மறுசீர மறுக்கட்டமைப்பு செய்வதாகவும் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் ஆறு சதவீதத்தை குறைக்க போவதாகவும் கடந்த ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இதன் ஒரு பகுதியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்களுடைய ஐடி சேவை பிரிவிலிருந்து சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக கிளவுட் மென்பொருட்கள் மற்றும் சர்வர்களை வாடகைக்கு விடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. அது மட்டும் இன்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனத்தின் கேமிங் பிரிவிலிருந்து சுமார் 1900 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய இன்டீட் இணையதளமும் தங்களது ஊழியர்களில் சுமார் 8 சதவீதம் பேரை லே ஆஃப் செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையில் பணியாற்றி வந்தவர்கள்.அடுத்ததாக ஜப்பானில் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா சுமார் 4000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திலேயே சுமார் 3500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் ஜூன் மாதத்திலும் இந்த நிறுவனம் பெருமளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் சரியான எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை.
புகழ்பெற்ற ஸ்டார்ட்டப் நிறுவனமான ரேஷ்மண்டி தங்களுடைய ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு நீக்கியது. டெலிவரி நிறுவனங்களான ஈபே, பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகியவையும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications