உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
வங்கிகள் மட்டுமின்றி தற்போது தனியார் நிதி நிறுவனங்களும் பண பரிவர்த்தனை சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கூகுள், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், அமேசான் ஆகிய நிறுவனங்களின் செயலிகளில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
அமேசான் கூகுள் பேஸ்புக்
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் பேசியபோது, 'பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்
உலகின் பெரிய நிறுவனங்களின் போட்டி மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் இந்த நிறுவனங்கள் நிதி சேவையில் ஈடுபட்டு வருவதால் தொடர்பு அச்சுறுத்தலாக இருந்தது என்றும் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி சேவை
இணைய வர்த்தகம் செய்யும் அமேசான் நிறுவனம், தேடு பொறி நிறுவனமான கூகுள் மற்றும் சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆகியவை உலக அளவில் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருவதோடு இந்தியாவில் நிதி சேவையிலும் ஈடுபட்டு வருகின்றன.
கண்காணிப்பு
இந்த நிறுவனங்கள் தனியாகவோ அல்லது ஏதேனும் நிறுவனத்துடன் இணைந்தோ இந்த நிதிச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை மூலம் செயல்படுவதால் இவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த நிறுவனத்தில் பண பரிமாற்றம் செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளதால் அவற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications