இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது ஹைத்ராபாத், புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, சண்டிகர், மங்களூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 நகரங்களில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆக இதன் மூலம் அந்தந்த நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு இது உதவும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் வளர்ச்சி
முன்னதாக நாட்டில் 50,000 தற்காலிக வேலைகளை அறிவித்த அமேசான், அதன் பிறகு தற்போது இந்த வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் Virtual Customer Service திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பர். இதனால் வீட்டில் இருந்து வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கும் இதில் வாய்ப்புகள் உண்டு.
தகுதி என்ன?
சரி இந்த வேலைக்கு தகுதி என்ன? அமேசானின் இந்த பருவகால பணியமர்த்தலுக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தால் கூட போதும் என்கிறது அமேசான். எனினும் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழில்களில் ஒன்றினை சரளமாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
இந்த அதிரடியான வேலை வாய்ப்பின் மூலம் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்காலிக வேலை என்று கூறப்படும் நிலையில் 6 மாத காலம் வரையில் இதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன வேலை?
இவ்வாறு பணியில் அமரும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சமூகத்தில் இருந்து வரும் போன் கால் மற்றும் மெயில்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் தற்காலிக பணிகளாக இருந்தாலும்., அவர்களின் திறமை மற்றும் வணிகத் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பதவிகளை நிரந்தரமாக்க கூடும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
எப்படி விண்ணபிப்பது?
இவ்வாறு வேலைக்கு விண்ணபிக்க 1800-208-9900 என்ற எண்ணிக்கு அழைத்து விவரங்களை கூறலாம். அல்லது [email protected] என்ற மெயில் ஐடி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
எது எப்படியோங்க கொரோனாவினால் பணியிழந்தவர்களூக்கு இது ஒரு தற்காலிக வாய்ப்பாக அமையும்..
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications