அமேசான் இந்தியா 'Womennovator' உடனான தனது கூட்டணி குறித்து அறிவித்துள்ளது. இது பெண் தொழில் முனைவோருக்கான உலகளாவிய காப்பகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இது உலகம் முமுக்க அவர்களது பொருட்களை விற்பனை செய்ய பெண்களுகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டமைப்பாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 200 பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை அமேசானின் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் அவர்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உதவும் என அறிவித்துள்ளது.
என்னென்ன நிறுவனங்கள்?
இதன் மூலம் இணையதளங்கள், இந்தியாவில் இருந்தும் உலகளாவிய அளவில் பிராண்டுகளை உருவாக்க முடியும் . இதில் கிட்ஷி வின்ஷி (kidsy vinshi), விசாலா நேச்சுரல்ஸ், ஜெம்ஸ் & ஜூவல்லர்ஸ் அன்ட் புங்கோ ஜங்கோ உள்ளிட்ட பல வணிகங்களும் அடங்கும்.
என்னென்ன பொருட்கள்?
இந்த தொழில் முனைவோர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜவுளி வகைகள், அழகு, ஜூவல்லரி, மசாலாக்கள், சுகாதாரம் சம்பந்தமான பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அழகு சாதன பொருட்கள், அலுவலக பொருட்கள் என பல வகையான செயல்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் அமேசான் தளம் மூலம் சர்வதேச அளவில், தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
வாய்ப்புகள் அதிகரிக்கலாம்
கூடுதலாக இந்த பிராண்டுகளுக்கு திறன் மேம்பாடு, எப்படி இந்த பொருட்களை பட்டியலிடுதல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவற்றை பற்றிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
இதன் மூலம் இந்திய வணிகர்களின் ஏற்றுமதி என்பது அதிகரிக்கும். இது புதிய தொழில் முனைவோருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
இது தான் இலக்கு
இந்தியா 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து 20 பில்லியன் டாலர் மொத்த இ- காமர்ஸ் ஏற்றுமதியை செயல்படுத்துவதற்கான, எங்கள் உறுதிபாட்டை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்.
அதேபோல வணிகர்கள் அமேசானும் இணைந்து ஏற்றுமதியை எளிதாக அணுக கூடியதாக மாற்றுவதே எங்களின் கவனமாக இருந்து வருகின்றது.
MSME-களுக்கான திட்டம்
அமேசான் குளோபல் விற்பனை என்பது ஜெப் பெசோஸ் நிறுவிய ஒரு திட்டமாகும். இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக வணிகம் செய்யக் கூடிய ஒரு வாய்ப்பினை கொடுக்கும். இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எம்.எஸ். எம்.இ-க்கள் உள்ளன. இது இந்திய பொருளாதாரத்தில் 30% பங்கினை வகிக்கின்றன. இதே இந்தியாவின் ஏற்றுமதியில் 45% பங்கும் வகிக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பினை வழங்கும் இரண்டாவது பெரிய துறையாகவும் உள்ளது.
எதிர்கால திட்டம்
தற்போது இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் பொருட்களை 200-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த பொருட்களின் விற்பனையானது 5 பில்லியன் டாலர்களையும் தாண்டியுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 20 பில்லியன் டாலர்களாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications