பெங்களூரு: அமேசான் நிறுவனம் ஈ-காமர்ஸ் மட்டுமல்லாது, அமேசான் பிரைம், அமேசான் கிண்டில், அமேசான் மியூசிக் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அமேசானை பொறுத்தவரை இந்தியாவில் கணிசமான சந்தையை பிடித்துள்ளது. மேலும் நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக கூடுதலாக அலுவலகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.
வடக்கு பெங்களூருவில் கால் பதிக்க விரும்பும் அமேசான் அதற்காக 1.1 மில்லியன் சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. சாத்வா குழுமத்திடம் இருந்து அமேசான் இதனை குத்தகைக்கு எடுத்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலேயே இருக்கக் கூடிய சாத்வா ஹாரிஸான் பிஸினஸ் பார்க்கின் 11 அடுக்கு மாடி கட்டடம் முழுவதையும் அமேசான் தான் வாங்கியுள்ளது. இங்கே 7,000 ஊழியர்கள் பணி செய்ய முடியுமாம்.
அண்மையில் அமேசான் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் தொழில்களை ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தற்போது இந்த கட்டடத்தில் அலுவலகத்திற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்ட அலுவலகம் அடுத்த ஆண்டு மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமேசான் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதே போல அண்மையில் அலுவலகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. பெங்களூரு, குருகிரா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொத்தமாக 1.45 மில்லியன் சதுர அடிக்கு அலுவலகங்களை வாங்கியுள்ளது. அமேசான் வெப் சர்வீஸ், மேம்பாட்டு மையம், விற்பனை சேவைகள், போக்குவரத்து சேவைகள் தொடர்பான அலுவலகங்கள் இங்கே செயல்பட உள்ளன.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் முற்றிலுமாக ரிமோட் பணிகளாக இருந்தனவற்றை ஹைபிரிட் பணிகளாக மாற்றியுள்ளது. வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும் என கூறியுள்ளது. எனவே தென்னிந்தியாவில் குறிப்பாக அலுவலகங்களை விரிவாக்கம் செய்கிறது. அமேசான் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்துக்கு வர வழைத்துவிட்டன. இதனால் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பது என்பது மார்ச் காலாண்டில் 16.2 மில்லியன் சதுர அடிகளாக அதாவது கடந்த ஆண்டை விட 43% உயர்ந்துள்ளது என Knight Frank நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஜிசிசி எனப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றுக்கான அலுவலக தேவைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதில் பெங்களூரு தான் முன்னிலையில் இருக்கிறது. இங்கே மார்ச் காலாண்டில் மட்டும் 3.5 மில்லியன் சதுர அடிக்கு அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications