உலகளவில் முன்னணி ஈ காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக இருக்கிறது அமேசான் நிறுவனம். அமேசான் , அமேசான் வெப் சர்வீஸ், அமேசான் பிரைம் என பலதுறைகளிலும் கால் பதித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் 1.38 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர்.
கடந்த அக்டோபரில் தான் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் சுமார் 14,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புது ஆண்டு தொடங்கி முதல் மாதம் தான் நடைபெற்று வருகிறது. ஆனால் மீண்டும் ஒரு பணி நீக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு அமேசான் நிறுவனம் தயாராகி இருக்கிறதாம். அடுத்த வாரத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 14,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது லட்சக்கணக்கான அமேசான் ஊழியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் அமேசான் நிறுவனத்தில் 1.58 மில்லியன் பேர் பணி புரிகின்றனர். இந்த ஊழியர்களின் பெரும்பாலானவர்கள் கிடங்குகள் மற்றும் பல்வேறு மையங்களில் பணிபுரிகிறார்கள். கார்ப்பரேட் ஊழியர்கள் சுமார் 10% பேர் உள்ளனர். இந்த சூழலில் 14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அறிவிப்பை அமேசான் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறதாம்.
அமேசான் வெப் சர்வீஸ், அமேசான் ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் ஹெச்ஆர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட உள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே அமேசான் நிறுவனம் சுமார் 14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிக தீவிரமாக பயன்படுத்த போவதாக தெரிவித்தது.
ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு நவீன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது , இன்டர்நெட் வருகைக்குப் பிறகு நிறுவனங்கள் வேலை செய்யும் விதத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு புரட்சிகர தொழில்நுட்பமாக ஏஐ வளர்ந்து நிற்கிறது. எனவே தொடர்ந்து அதில் கவனம் செலுத்த போகிறோம் என அப்போதே அமேசான் தெரிவித்திருந்தது. அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜெஸ்ஸி ஊழியர்கள் பணிநீக்கம் என்பது நிதி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல , ஏஐ ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல நிறுவனத்தில் பல்வேறு படிநிலைகளில் ஊழியர்கள் இருக்கிறார்கள் இதனால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது வேலையை முடிப்பது தாமதமாகிறது எனவே அந்த படிநிலைகளை குறைக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் எதிர் வரக்கூடிய காலங்களில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அமேசானில் கோடிங் உள்ளிட்ட வேலைகள் படிப்படியாக ஏஐ ஏஜெண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இது தவிர கிடங்குகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை பயன்படுத்தவும் அமேசான் தயாராகி வருகிறது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

AI பயமா..? போடா, இந்த வேலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ZOHO ஸ்ரீதர் வேம்பு டிவீட்டால் சலசலப்பு..!!

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்திய அமெரிக்கா!! கசிந்தது ராணுவ ரகசியம்!!

ஆந்த்ரோபிக் எடுத்த முடிவு.. கடுப்பான டிரம்ப்.. ஆடிப்போன பென்டகன்..!!

இரவோடு இரவாக நடந்த டீலிங்.. பென்டகன் உடன் கைகோர்த்த OpenAI.. சாம் ஆல்ட்மேன் டிவீட்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications