உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களில் ஒன்றான அமேசான் (Amazon) நிறுவனம், அதன் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது பணியமர்த்தப்பட்ட கூடுதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேசானில் மொத்தம் 15.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 3,50,000 பேர் கார்ப்பரேட் ஊழியர்கள் ஆவர். தற்போது குறைக்கப்படவுள்ள 30,000 பேர், இந்த கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 10% ஆகும். அமேசான் கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 27,000 பதவிகளை நீக்க ஆரம்பித்த பிறகு, இதுதான் நிறுவனத்தின் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாக இருக்கும்.

இந்த பணிநீக்கங்கள் அமேசான் நிறுவனத்தின் மனித வளத்துறை, டிவைசஸ் மற்றும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் அளிக்கும் பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல பிரிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, நிறுவனத்தில் உள்ள அதிகப்படியான நிர்வாக அடுக்குகள் மற்றும் தேவையற்ற அதிகாரத்துவத்தை குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
ஆண்டி ஜாஸ்ஸி சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் அறிமுகப்படுத்திய ரகசியக் குறைதீர்க்கும் முறையில் சுமார் 1,500 புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் 450-க்கும் மேற்பட்ட செயல்முறைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த 30000 பேர் பணிநீக்கம் குறித்து அமேசான் எவ்விதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை, ரெயூட்டர்ஸ் விளக்கம் கேட்டும் பதில் அளிக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, திரும்பத் திரும்பச் செய்யப்படும் மற்றும் வழக்கமான பணிகளைத் தானியங்கியாக செய்வதால் மேலும் பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜாஸ்ஸி கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். அமேசான் தற்போது AI-யால் பெரும் உற்பத்தித் திறன் ஆதாயங்களைப் பெறுவதால் பணிநீக்கத்தை மேற்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அலுவலகம் திரும்புவதில் உள்ள சிக்கல்: இந்த பணிநீக்கத்திற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது, தினமும் 5 நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு ஊழியர்களை அழைக்கும் நிறுவனத்தின் கண்டிப்பான கொள்கை ஆகும். இந்த கொள்கையால் கூட, போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் தாமாக பணியை விட்டுச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, கார்ப்பரேட் அலுவலகங்களில் இருந்து வெகு தொலைவில் வசிப்பவர்கள் போன்ற தினசரி வருகையைப் பதிவு செய்யாத சில ஊழியர்கள், தாமாகவே ராஜினாமா செய்ததாக கருதப்பட்டு, எவ்வித இழப்பீடும் இன்றி வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் ஒரு வழியாகும்.
அமேசானின் இந்த முடிவு உலகளாவிய தொழில்நுட்ப பணியமர்த்தல் போக்குகளைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 216 நிறுவனங்களில் சுமார் 98,000 வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாக Layoffs.fyi என்ற இணையதளம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications