உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களில் ஒன்றான அமேசான் (Amazon) நிறுவனம், அதன் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது பணியமர்த்தப்பட்ட கூடுதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேசானில் மொத்தம் 15.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 3,50,000 பேர் கார்ப்பரேட் ஊழியர்கள் ஆவர். தற்போது குறைக்கப்படவுள்ள 30,000 பேர், இந்த கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 10% ஆகும். அமேசான் கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 27,000 பதவிகளை நீக்க ஆரம்பித்த பிறகு, இதுதான் நிறுவனத்தின் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாக இருக்கும்.

இந்த பணிநீக்கங்கள் அமேசான் நிறுவனத்தின் மனித வளத்துறை, டிவைசஸ் மற்றும் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் அளிக்கும் பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல பிரிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, நிறுவனத்தில் உள்ள அதிகப்படியான நிர்வாக அடுக்குகள் மற்றும் தேவையற்ற அதிகாரத்துவத்தை குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
ஆண்டி ஜாஸ்ஸி சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் அறிமுகப்படுத்திய ரகசியக் குறைதீர்க்கும் முறையில் சுமார் 1,500 புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் 450-க்கும் மேற்பட்ட செயல்முறைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த 30000 பேர் பணிநீக்கம் குறித்து அமேசான் எவ்விதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை, ரெயூட்டர்ஸ் விளக்கம் கேட்டும் பதில் அளிக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, திரும்பத் திரும்பச் செய்யப்படும் மற்றும் வழக்கமான பணிகளைத் தானியங்கியாக செய்வதால் மேலும் பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜாஸ்ஸி கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். அமேசான் தற்போது AI-யால் பெரும் உற்பத்தித் திறன் ஆதாயங்களைப் பெறுவதால் பணிநீக்கத்தை மேற்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அலுவலகம் திரும்புவதில் உள்ள சிக்கல்: இந்த பணிநீக்கத்திற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது, தினமும் 5 நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு ஊழியர்களை அழைக்கும் நிறுவனத்தின் கண்டிப்பான கொள்கை ஆகும். இந்த கொள்கையால் கூட, போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் தாமாக பணியை விட்டுச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, கார்ப்பரேட் அலுவலகங்களில் இருந்து வெகு தொலைவில் வசிப்பவர்கள் போன்ற தினசரி வருகையைப் பதிவு செய்யாத சில ஊழியர்கள், தாமாகவே ராஜினாமா செய்ததாக கருதப்பட்டு, எவ்வித இழப்பீடும் இன்றி வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் ஒரு வழியாகும்.
அமேசானின் இந்த முடிவு உலகளாவிய தொழில்நுட்ப பணியமர்த்தல் போக்குகளைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 216 நிறுவனங்களில் சுமார் 98,000 வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாக Layoffs.fyi என்ற இணையதளம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications