அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்ட திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்த பின்னர் இப்போது திருமணத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பத்திரிக்கை முதல் புடவை ஷாப்பிங் வரையிலும், முக்கிய பிரபலங்களை நேரில் சென்று முகேஷ் அம்பானி குடும்பமாக அழைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் ஜியோ வோர்ல்டு டிரேட் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் பரபரப்பை நடைபெற்று வரும் வேளையில், இவர்களின் திருமணத்திற்கு முன் அதாவது நாளை அம்பானி குடும்பம், ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

ANI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, ஜூலை 2ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சுவாமி விவேகானந்த வித்யாமந்திரில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் பிரம்மாண்ட விழா அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் ஏற்பாடு செய்துள்ள இந்த திருமண விழாவிற்கு இக்குடும்பம் முழுமையாக நிதி உதவி செய்வது மட்டுமல்லாமல், நேரடியாக விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் ஜோடிகளை வாழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் இந்த திருமண விழா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட முன்வைபோக நிகழ்ச்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.
கடந்த 2 வாரமாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி பல பிரபலங்களை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் டிரெண்டிங் ஆனது, இதில் முக்கியமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண பத்திரிக்கை வீடியோவும், திருமணத்திற்கு அழைக்கச் சென்ற போது ஏக்நாத் ஷின்டே மீது ஆனந்த் அம்பானி தோளில் கை போட்ட வீடியோ மக்கள் மத்தியில் டிரெண்டானது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications