சென்னை நகரம் ஏற்கனவே மழை நீரில் தத்தளித்து வரும் வேளையில் தற்போது முகப்பேர், செங்குன்றம், ஆவடி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் சோகத்தில் உள்ளனர், இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த மழையின் காரணமாக முக்கியமான தொழிற்பேட்டைகளில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அதிகம் இருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெரும் பகுதி மிக்ஜாம் புயலால் உருவான கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் மூழ்கியது. இந்த மழையின் காரணமான இப்பகுதியில் இருக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையில் மழை பெய்தது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளதோடு, மழைநீர் 4 அடி உயரத்திற்கு மேல் தேங்கியதால் பல தொழிற்சாலைகள் முடங்கியது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தென் பகுதியில் வேகமாக மழைநீர் குறைந்து, தண்ணீர் அளவு சரிய துவங்கியது. ஆனால் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிகிறது. மேலும் மழை நீர் முழுமையாக வடிந்தால் தான் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என சரியான மதிப்பீட்டில் கணிக்க முடியும்
தோராயமாக கணக்கிட்டால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டுமே இந்த மழையால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையிலும் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டு உள்ளதாக முன்கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.
அம்பத்தூர், பாடி முதல் பல தொழிற்துறை பகுதிகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு மேல் இருக்கும் காரணத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பாழாகியுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் முதல் MSME நிறுவனங்கள் வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஐடி பார்க் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக ஏரிக்கு அருகில் இருக்கும் டெக் பார்க் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, 2015 ஆம் ஆண்டை போல் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஐடி சேவை துறை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை பொருளாதாரத்தின் முக்கியமான ஆதாரம் உற்பத்தித் துறை, ஐடி துறை ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை நகரின் உற்பத்தி மற்றும் ஐடி சேவை துறை இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 2 வாரமாவது ஆகும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications