இந்திய வர்த்தக துறையில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் விஷயம் செமிகண்டக்டர், சீனா - அமெரிக்கா மத்தியிலான பிரச்சனையில் செமிகண்டக்டர் துறையில் புதிய டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்த டிமாண்ட்-ஐ தீர்க்கும் தளமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் தனது பேகேஜிங் தளத்தை அமைக்கும் செய்தி சாதகமான விஷயமாக இருந்தாலும், வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி முறிந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான AMD முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான AMD, பெங்களூரில் உலகின் மிகப்பெரிய R&D வசதியுடன் புதிய கேம்பஸ் உருவாக்க திட்டமிட்டுள்ளது. AMD நிறுவனம் இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யும் திட்டத்தை AMD இன்று அறிவித்தது.
இந்த 400 மில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக ஏறக்குறைய 3000 இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு மிகப்பெரிய AMD டிசைன் சென்டரை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய பெங்களூர் வளாகம் திறக்கப்பட உள்ளதாக குஜராத்தில் SemiconIndia 2023 கூட்டத்தில் AMD தனது திட்டத்தை அறிவித்தது.
இந்தியாவில் 2001 முதல் அமெரிக்காவின் செமிகண்டக்டர் நிறுவனமான AMD இயங்கி வருகிறது. முதல் அலுவலகத்தை டெல்லியில் திறந்த நிலையில், பெங்களூரின் 500000 சதுரடி அலுவலகம் மூலம் நாட்டின் 10 இடங்களில் அலுவலகத்தை திறந்துள்ளது, AMD நிறுவனத்தின் அலுவலகம் தற்போது பெங்களூர், டெல்லி, கூர்கான், ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ளது.
இதன் மூலம் மோடியின் செமிகண்டக்டர் திடத்திற்கு 400 மில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக அமெரிக்காவின் செமிகண்டக்டர் நிறுவனமான AMD கைகொடுத்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications