டெல்லி: அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி அமெரிக்கா அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை செயல்படுத்தி இருக்கிறது.
வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த போதிலும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இப்படி வரிவிதிப்பு நடவடிக்கை எடுத்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட முயற்சி செய்வதற்காகவும், ஆனால் பிரதமர் மோடி அவரிடம் பேச மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெர்மனியில் வெளியாகி வரும் Frankfurter Allgemeine என்ற ஒரு செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இது எக்ஸ் பக்கத்திலும் பலரால் பகிரப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் தொடர்ச்சியாக நான்கு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவருடைய அழைப்பை பிரதமர் மோடி ஏற்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது .
அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் அவரது அழைப்பை ஏற்று அவர் பேசவில்லை என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரம்பின் வர்த்தக கொள்கைகளும் வரி விதிப்பு நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் இந்திய பொருட்களுக்கு 25% வரியை விதித்த டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கூடுதலாக 25% வரியை வரி என மொத்தம் 50 சதவீத வரியை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார். இது இந்தியாவை சேர்ந்த ஜவுளி , நவரத்தினங்கள் மற்றும் நகைகள் என ஏற்றுமதி சார்ந்த பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதிக்க இருக்கிறது.
இந்த சூழலில் தான் மோடி அமெரிக்க அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் டிரம்ப் நான்கு முறை தொடர்பு கொண்டும் மோடி பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை செய்த நாளிதழ் தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் டிரம்ப் நெருக்கம் காட்டுவது , இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக கூறியது என டிரம்பின் பல நடவடிக்கைகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து எரிச்சலை உண்டாக்கி இருக்கின்றன.
இறுதியாக கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது, அது 35 நிமிடங்கள் நீடித்தது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications