இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. இந்நிறுவனம் அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, டிசிஎஸ் நிறுவனத்தை மேலும் துரிதமாக செயல்பட வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றம் அடையும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணிநீக்க அறிவிப்பு, நிறுவனம் செயல்படும் பல்வேறு நாடுகள் மற்றும் தொழில் துறைகளில் உள்ள பணியாளர்களை பாதிக்கவுள்ளது. இந்த திட்டம், 2026ஆம் நிதியாண்டில் (அதாவது ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிரிதிவாசன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். வேலை செய்வதற்கான முறைகள் மாறி வருகின்றன. நாம் எதிர்காலத்திற்குத் தயாராகவும் துரிதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களை மதிப்பீடு செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதிய பொறுப்புகளை வழங்குவதில் நிறைய முதலீடு செய்துள்ளோம். இருப்பினும், சில பணிகளில் மாற்று பணிநியமனங்கள் பயனுள்ளதாக இருக்கவில்லை. இதனால், உலகளாவிய அளவில் டிசிஎஸ் பணியாளர்களில் சுமார் 2% பேர் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருப்பவர்கள் இதில் அடங்குவர். இது எளிதான முடிவல்ல. தலைமை நிர்வாகியாக நான் எடுத்துக் கொண்ட கடினமான முடிவுகளில் இது ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் 2025 ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான பணியாளர் எண்ணிக்கை 6,13,000 ஆகும். இதன் அடிப்படையில், 2 சதவீதம் குறைப்பு என்பது சுமார் 12,200 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை குறிக்கிறது. இது ஒரு கடினமான முடிவாக இருந்தாலும், ஒரு வலிமையான மற்றும் எதிர்காலத் தயாரான TCS-ஐ உருவாக்குவதற்காக எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். எங்களால் முடிந்தவரை, இந்த செயல்முறை மனிதநேயமான முறையில் நடைபெறும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்றும் கே. கிரிதிவாசன் கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து 2% பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ள நிலையில், நோட்டீஸ் கால சம்பளம், கூடுதல் செவெரன்ஸ் பேக்கேஜ், காப்பீட்டு வசதிகளை நீட்டித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து கவனித்து வரும் இரு பங்கு ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த பணிநீக்கங்கள் ஏஐ மாற்றத்தால் நிகழ்ந்தவை ஆகும். முன்னர் தேவையாக இருந்த திறன்கள் இருந்தன. குறிப்பாக முகநூல் சோதனை போன்றவை தற்போது தேவையற்றதாக மாறுகின்றன. சில மூத்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்ப சூழலுக்கேற்ப மாற தயங்குகிறார்கள். கிளையண்ட் திட்டங்கள் சுருங்கி, குறுகிய காலத்தில் முடியும் பணிகள் அதிகரித்துள்ளன. இதனால், அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications