கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மோசமாக இருந்தது, குறிப்பாக ஆடம்பர பிரிவுகளில் வீடு விற்பனை என்பது கூடுதலாகவே பாதிக்கப்பட்டது.
ஆனால் மும்பையில் 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆடம்பர பிரிவில் அதிகளவிலான வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஆடம்பர வீடு
15 முதல் 100 கோடி ரூபாய் பிரிவில் இருக்கும் ஆடம்பர வீடுகளின் விற்பனை எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளது. இப்பிரிவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மும்பையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
கொரோனா முதல் அலை
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட போது மகாராஷ்டிர அரசு ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு பத்திர பதிவு கட்டணத்தைக் குறைத்தது. இதன் வாயிலாக ஆடம்பர வீடுகள் மீதான மக்களின் மோகம் அதிகரித்து இப்பிரிவில் விற்பனை அதிகரித்துள்ளது.
6 மாத விற்பனை
2021ஆம் நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆடம்பர வீடுகளில் 60 சதவீதம் 15 கோடி ரூபாய்க்கு மேல், மீதமுள்ள 40 சதவீதம் தான் 15 கோடி ரூபாய் அளவீட்டில் உள்ளது. மேலும் இக்கெக்கட்டத்தில் பதிவு செய்யப்படும் வீடுகளுக்குப் பத்திர கட்டணம் வெறும் 2 சதவீதம் மட்டுமே.
பத்திர கட்டணம்
பத்திர கட்டணம் குறைத்தது ஆடம்பர வீடுகளை வாங்க விரும்பியவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று சொல்ல வேண்டும்.
அமிதாப் பச்சன், சன்னி லியோன்
இந்த காலகட்டத்தில் மும்பை நகரின் மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களும் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர். அதில் குறிப்பாகா அமிதாப் பச்சன், சன்னி லியோன், அமைச்சர் அசோக் சவான், ஸ்மிதா பாரிக், ஹெச்டிஎப்சி வங்கி முன்னாள் தலைவர் தீபக் பாரிக் ஆகியோர் இக்காலகட்டத்தில் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications