பல்வேறு பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஐடி துறை மந்தநிலையில் இருப்பது ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு காரணமாக முன்வைக்கப்படுகின்றன.
ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பல நிறுவனங்களும் கருணையே இல்லாமல் செயல்படுவது குறித்து ரெடிட் தளத்தில் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் சிலருடைய பணி நீக்க கதை கேட்பவர்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டிருக்கும் பதிவு கேட்போருக்கே கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருக்கிறது.

குர்குவானில் நிதி நிறுவனம் ஒன்றில் நிதி ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்த அந்த நபர் கடந்த ஜூலையில் தான் ஒரு டி2சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாராம். வேலைக்கு சேர்ந்த 2 நாட்களிலேயே திடீரென நிறுவன ஹெச்.ஆர் அழைத்து உங்களை பணிநீக்க, செய்கிறோம் என கூறினார்களாம்.
நாங்கள் இந்த பதவிக்கு மேலும் சில பொறுப்புகளை கூடுதலாக வழங்க இருக்கிறோம், எனவே அதற்கு மேலும் சில ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவரே பொருத்தமாக இருப்பார். எனவே நீங்கள் இதற்கு பொருத்தமற்றவர் என கூறினார்களாம். இதனால் மனமுடைந்து போன அந்த நபர் அதை ஏன் வேலைக்கு எடுத்த 2 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் அதற்கு முன்னரே முடிவெடுத்து இருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
மன ரீதியாக இந்த விஷயம் தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ள அந்த இளைஞர் புதிய தொடக்கத்தை எண்ணி வந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார். தான் ஏற்கனவே வேலை செய்து வந்த நிறுவனத்திலும் தனக்கு மாற்றாக ஒருவரை பணிக்கு தேர்வு செய்துவிட்டனர் எனவே வேலையில்லாம்ல் நிற்கதியாக நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞரின் பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றி உள்ளனர். சிலர் சட்டரீதியாக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் உங்களுக்கு எந்த ஒரு நிதி சார்ந்த இழப்பீடும் வழங்காமல் எப்படி உங்களை உடனடியாக வேலையிலிருந்து நீக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். பலரும் மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர். சிலர் தங்களுக்கு நேர்ந்த பணி நீக்க அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றனர். சிறிய நிறுவனங்கள் மட்டும் கிடையாது பெரிய நிறுவனங்களிலும் கூட தற்போது இதுதான் நிலைமை என சுட்டிக்காட்டி உள்ளனர்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்திய அமெரிக்கா!! கசிந்தது ராணுவ ரகசியம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications