டெல்லி: வங்கிகளில் செய்யப்படும் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கான டிடிஎஸ் (TDS) வரி வரம்பை அரசு உயர்த்தியுள்ளது.
வங்கிகளில் செய்யப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு வட்டியும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் வட்டியானது காலாண்டு தோறும் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைத்தால் வங்கிகள் டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரி என்ற நடைமுறையில் வட்டியில் 10 சதவீதம் தொகையை கழித்துவிடுகின்றன. வாடிக்கையாளரின் பான் எண் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் 10 சதவீத வரியும், பான் எண் விவரங்கள் இல்லையென்றால் 20 சதவீத தொகையும் பிடித்தம் செய்யப்படும்.
இந்நிலையில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி அறிவித்துள்ளார். இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் நிதியாண்டு முதல் நிலையான வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், 50 ஆயிரம் ரூபாயை கடந்தால் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகையை வங்கிகள் குறிப்பிட்ட வாடிக்கையாளரின் பான் எண்ணில் வங்கிகள் இருப்பு வைத்துவிடும். நாம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் போது டிடிஎஸ் தொகையை குறிப்பிட்டு அந்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
அதே போல 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. இவ்வாறு மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் வந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த டிடிஎஸ் வரம்பையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி மூத்த குடிமக்கள் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை வைத்திருந்தால் அதன் வட்டி வருமானம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த புதிய வரி மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
story written-devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications