இந்தியாவின் இருபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களாக அதானி குழுமம், ரிலையன்ஸ் குழுமம் உள்ளது. இந்த குழுமங்களின் வாரிசுகள் தான் ஆனந்த் அம்பானி மற்றும் கரண் அதானி. ஏற்கனவே இரு குழுமங்களும் தங்களது வாரிசுகளை வணிக பொறுப்பினை கொடுத்து முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளது.
தற்போது மகராஷ்டிரா அரசும் இந்த இரு பெரும் சாம்ராஜ்ஜியங்களின் வாரிசுகளுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.
மாநில பொருளாதார ஆலோசனை குழு
சில தினங்களுக்கு முன்பு டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் தலைமையில் மாநில பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த குழு மகாராஷ்டிரா அரசின் பொருளாதாரத்தினை மேன்மைபடுத்த முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஷிண்டே கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஆனந்த் அம்பானி & கரண் அதானி
இந்த 1 டிரில்லியன் டாலர் மாநில பொருளாதார ஆலோசனை குழுவில் பல முக்கிய பிரபலங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த அட்வைசரி குழுவில் பல முதல்வர் அலுவலகத்தின் தகவல்கள் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மகள் கரண் அதானியும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாருக்கு என்ன துறை?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆனந்த் அம்பானி, மின் துறையையும், அதானி போர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரண் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை முன்னிலைப்படுத்துவார் என்றும் CMO அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 பேர் அடங்கிய குழு
இதற்கிடையில் 21 பேர் அடங்கிய இந்த பொருளாதார குழுவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தலைமை தாங்குவார் என்றும் தெரிகிறது.
இவர்கள் தவிர இந்த ஆலோனை குழுவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா, பெயின் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குமர் அமித் சந்திரா, தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விக்ரம் லிமாயே உள்ளிட்ட சிலரும் அடங்குவர்.
இன்னும் யாரெல்லாம்?
இது தவிர லார்சன் அண்ட் டூப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ் என் சுப்ரமணியன், சன் பார்மா நிர்வாக இயக்குனர் திலீப் சங்வி, மஹிந்திரா & மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா மற்றும் பத்வே இன்ஜினியரிங் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ காந்த் பத்வே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எதில் கவனம்
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்துப்படி, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும். இது விவசாயம், கல்வி, வங்கித்துறை தொடர்பான பிரச்சனைகளில் இந்த குழு கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக முதல்வர் மாநிலத்தின் பொருளாதாரத்தினை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலரை எட்ட இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியிருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications