உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான்? ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 

அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில் இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் வென்றால் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் கடைசி டீக்கடை வரை சென்ற யூபிஐ.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்இந்தியாவின் கடைசி டீக்கடை வரை சென்ற யூபிஐ.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

கிரிக்கெட் என்பது இந்தியர்களுக்கு வெறும் விளையாட்டு என்பது மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிகரமான உணர்வு என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதை ஒரு போர் போலவே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பார்ப்பார்கள்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு மரத்துக்கும் சுவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க நாய் ஒன்று மிகவும் ஆவலாக தன்னைத்தானே முயற்சித்து வரும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் யார் இருப்பார்கள் என்று அந்த நாய் மிகவும் ஆர்வத்துடன் பார்க்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா
 

ஆனந்த் மஹிந்திரா

மேலும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் நிச்சயம் மிகப்பெரிய வணிகம் நடக்கும் என்று அவரது வீடியோவுக்கு ட்விட்டர் பயனர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

வணிகம்

வணிகம்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் அடுத்தகட்ட போட்டிகளுக்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் மைதானத்தில் ரசிகர்கள் கூடுவார்கள் என்றும் அதனால் மிகப்பெரிய வணிகம் நடக்கும் என்றும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

5 லட்சம் பார்வையாளர்கள்

5 லட்சம் பார்வையாளர்கள்

மொத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ மிகப்பெரிய வரவேற்பை ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் பெற்றுள்ளது என்றும் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கணிப்புகள்

கணிப்புகள்

மேலும் கிரிக்கெட் ஆர்வலர்கள் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டி குறித்த தங்கள் கணிப்பையும், இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்ப்பது போல் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அது இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra Shares a Dog video and Asking for T20 World Cup Final!

The World Cup T20 cricket tournament has been going on for the past few days and now it has reached its final stage. India-England and New Zealand-Pakistan will face each other in the semi-finals, and if India and Pakistan win these matches, then India-Pakistan will face each other in the final.
Story first published: Tuesday, November 8, 2022, 8:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X