ஆனந்த் அம்பானி கல்யாணத்தில் ஜொலிக்கப்போகும் தெலங்கானா கரீம்நகர் வெள்ளி நகைகள்

கரீம்நகரின் எழில்மிகு சில்வர் ஃபிலிகிரி கலைநுணுக்கம் கொண்ட நகைகள் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இந்த ஆண்டு ஜூலையில் மும்பையில் நடைபெறுகிறது.

ஆனந்த் அம்பானி கல்யாணத்தில் ஜொலிக்கப்போகும் தெலங்கானா கரீம்நகர் வெள்ளி நகைகள்

இதற்காக கரீம்நகர் நகைக்கலைஞர்களால் வெள்ளி பிலிகிரி ஆபரணங்கள் ஜோராகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது நடைபெற்ற கண்காட்சியில் இந்த வகை பொருட்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இவற்றையும் கரிம்நகர் நகை கலைஞர்கள் தான் செய்தனர்.

தி சில்வர் பிரிலிகிரி ஆப் கரீம்நகர் ஹேண்டிகிராப்ட்ஸ் வெல்பேர் சொசைட்டியைச் சேர்ந்த கைதேர்ந்த நகை ஆசாரிகள் ரிலையன்ஸ் ரீடைலின் ஸ்வேஷ் ஸ்டோரில் இருந்து இந்த ஆர்டரை பெற்றுள்ளனர். இந்த ஆபரணங்கள் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட உள்ளன.

பல நூற்றாண்டுகள் பழமையான வேலைபாடு கொண்ட அலங்கார மற்றும் பரிசுப் பொருட்களை ஸ்வேஷ் ஸ்டோர் மூலமாக சொசைட்டியால் விற்பனை செய்யப்படுகிறது.

2007 ஆம் ஆண்டில் இந்த சொசைட்டி கரீம்நகர் சில்வர் பிலிகிரி நகைகளுக்கு ஜியோகிராபிகல் இண்டிகேஷன் அங்கீகாரத்தைப் பெற்றது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் அதன் தாரகாஷி (வெள்ளி ஃபிலிகிரீ) கைவினைப்பொருளைக் கண்டதன் மூலம் வெள்ளி நகரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் கிட்டத்தட்ட 2000 தாரகாஷி கைவினைஞர்களின் தாயகமாக உள்ளது, அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து கைவினைத்திறனைப் பெற்றனர். சண்டி தாரகாஷி, இந்தியாவில் மொகலாயர்கள் தங்கள் ஆட்சியை நிறுவியபோது இந்த வெள்ளி பிளிகிரீ கைவினை ஒடிசாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

அதேபோல் தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் பகுதியானது ஃபிலிகிரீ எனப்படும் நுட்பமான கைவினைத்திறனைப் பயிற்சி செய்யும் பல திறமையான கலைஞர்களின் தாயகமாகும். கரண்டிகள், சிகரெட் பெட்டிகள், பொத்தான் பெட்டிகள், ஆஷ்ட்ரேக்கள், நகை பொத்தான்கள், மாத்திரை பெட்டிகள், பாண்டன்கள் மற்றும் வாசனை திரவிய கொள்கலன்கள் போன்ற பல சில்வர் ஃபிலிக்ரீ மூலம் உருவாக்குவதில் அவர்கள் திறமையானவர்கள்.

ஃபிலிகிரீ என்பது லத்தீன் வார்த்தையான "ஃபிலம்" என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது நூல் மற்றும் "கிரானம்" அதாவது தானியம் அல்லது சிறிய மணிகள் எனப்படும். தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டம் இந்த நுட்பமான கைவினைத்திறனைப் பயிற்சி செய்யும் மிகவும் திறமையான கலைஞர்களுக்கு உலகப் புகழ்பெற்றது.

பிலிகிரீ நகைகளுக்கு மட்டுமல்லாமல் கரீம்நகர் மாநிலத்தின் ஒரு முக்கிய விவசாய மையமாகும். நகரைச் சுற்றியுள்ள பரந்த விவசாயப் பகுதிகள் கோதாவரி ஆற்றின் நீர்ப்பாசனம். எல்கண்டல், வெமுலவாடா ஆகியவை இந்த நகரத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+