99 ரூபாய்க்கு புதிய சரக்கு.. ரூ.5500 கோடி கல்லாகட்டும் ஆந்திரபிரதேச அரசின் புதிய மதுபான கொள்கை..!

ஆந்திரப் பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை அன்று புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, ஹரியானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் சில்லரை விற்பனையாளர்கள் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். அதாவது மது விற்பனையை தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறது. இதன் மூலம் மாநிலம் ரூ. 5,500 கோடி வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கிறது.

மதுபான சில்லரை விற்பனையை தனியார்மயமாக்க ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3,736 சில்லரை கடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும். இதற்கு அரசு லைசன்ஸ் வழங்க உள்ளது. இந்த புதிய கொள்கை, அக்டோபர் 12, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றத்தின் மூலம், மதுபான விற்பனையை தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறது. இதுவரை, அரசு மதுபான கடைகளை நடத்தி வந்தது. இந்த புதிய கொள்கையால், மதுபான விற்பனை அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

 99 ரூபாய்க்கு புதிய சரக்கு.. ரூ.5500 கோடி கல்லாகட்டும் ஆந்திரபிரதேச அரசின் புதிய மதுபான கொள்கை..!

இந்த புதிய மதுபானக் கொள்கையுடன், அரசு குறைந்த வருவாய் கொண்ட குழுக்களுக்கு மலிவு விலையில் விருப்பங்களை வழங்க முயற்சிக்கிறது. ஆந்திர அரசு ரூ. 99 அல்லது அதற்கும் குறைவான விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, சட்டவிரோத மதுபானங்களுக்கான தேவையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சப்ளையர்கள் தங்கள் பிராண்டுகளை இந்த விலை வரம்பில் அறிமுகப்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளின் விற்பனை வீழ்ச்சியை புதிய மதுபானக் கொள்கை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை மூன்று சிறந்த சந்தைகளில் ஒன்றாக மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையானது 2 வருட காலத்தைக் கொண்டிருக்கும். ஆந்திரப் பிரதேசத்தின் மதுபானச் சந்தை கடந்த 5 ஆண்டுகளில் சீரான விலை உயர்வு மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு சாதகமாக பாதியாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவாகும் என்பதால், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்பிலான முதலீடுகளில் புதிய ஆர்வத்தை எதிர்பார்க்கிறோம் என்று இந்தியாவின் பீர் தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

உரிமங்கள் ஒதுக்கீடு ஆன்லைன் லாட்டரி மூலம் செய்யப்படவுள்ளது. மேலும் நான்கு வகையான உரிமங்கள் ரூ. 50 லட்சம் முதல் 85 லட்சம் வரையிலான கட்டணத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20% லாபம் பெறுவார்கள். மேலும் 12 பிரீமியம் கடைகளுக்கு 5 வருட கால அவகாசத்துடன் ரூ. 1 கோடி கட்டணத்துடன் அரசு உரிமம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+