ஒவ்வொரு 50 கிமீ தொலைவுக்கும் ஒரு துறைமுகம் – சந்திரபாபு நாயுடுவின் பலே திட்டம்!!

ஆந்திரா: ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு மீன் பிடி துறைமுகம் அல்லது துறைமுகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு பதவி ஏற்றார். இதனை அடுத்து அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவருடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஆந்திராவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அமைச்சர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு 50 கிமீ தொலைவுக்கும் ஒரு துறைமுகம் – சந்திரபாபு நாயுடுவின் பலே திட்டம்!!

தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு சலுகைகளையும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு துறைமுகம் சார்ந்த துறையை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு துறைமுகம் அல்லது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் நீளம் கடற்கரை கொண்ட ஒரு மாநிலமாக ஆந்திரா இருக்கிறது. இதனை பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த சந்திரபாபு நாயுடு தலைமை அரசு முடிவு செய்திருக்கிறது.

தங்களுடைய கடற்கரைகளை சரியான முறையில் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஒரு புதிய கொள்கையை வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகத்தை அடிப்படையாக கொண்ட உள்கட்டமைப்புகள் மாநிலத்தில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் துறைமுகம் அமைப்பது, கப்பல் கட்டுமான தளங்களை உருவாக்குவது, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்துவது ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். இதன் ஒரு பகுதியாக நெல்லூர் மாவட்டத்தில் கப்பல் கட்டுமான மற்றும் சீர் செய்யும் தளத்தை அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான ஆய்வறிக்கை உடனடியாக தயாரிக்கும் படி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தம் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைய உள்ளது. இதில் 1000 ஏக்கரில் கப்பல் கட்டும் மையமும், மீதமுள்ள இடத்தில் கப்பல் சீர் செய்யும் மையமும் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்திற்கான நிலத்தை ஆந்திர மாநில அரசு பெற்று தந்துவிடும், மத்திய அரசு 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட்டால் நேரடியாக 5000 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 30,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+