ஆந்திரா: ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு மீன் பிடி துறைமுகம் அல்லது துறைமுகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு பதவி ஏற்றார். இதனை அடுத்து அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவருடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஆந்திராவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அமைச்சர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு சலுகைகளையும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு துறைமுகம் சார்ந்த துறையை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு துறைமுகம் அல்லது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் நீளம் கடற்கரை கொண்ட ஒரு மாநிலமாக ஆந்திரா இருக்கிறது. இதனை பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த சந்திரபாபு நாயுடு தலைமை அரசு முடிவு செய்திருக்கிறது.
தங்களுடைய கடற்கரைகளை சரியான முறையில் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஒரு புதிய கொள்கையை வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகத்தை அடிப்படையாக கொண்ட உள்கட்டமைப்புகள் மாநிலத்தில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைவிலும் துறைமுகம் அமைப்பது, கப்பல் கட்டுமான தளங்களை உருவாக்குவது, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்துவது ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். இதன் ஒரு பகுதியாக நெல்லூர் மாவட்டத்தில் கப்பல் கட்டுமான மற்றும் சீர் செய்யும் தளத்தை அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான ஆய்வறிக்கை உடனடியாக தயாரிக்கும் படி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தம் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைய உள்ளது. இதில் 1000 ஏக்கரில் கப்பல் கட்டும் மையமும், மீதமுள்ள இடத்தில் கப்பல் சீர் செய்யும் மையமும் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்கான நிலத்தை ஆந்திர மாநில அரசு பெற்று தந்துவிடும், மத்திய அரசு 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட்டால் நேரடியாக 5000 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 30,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications