இந்தியாவில் கோயில்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஆண்டு முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும் பகுதி கோயில்கள் என குறிப்பிட்டார்.

இந்தியாவில் கோயில்கள், கோயில்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொருளாதாரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்த சந்திரபாபு நாயுடு மற்ற எந்த பொருளாதார செயல்பாடுகளுடன் ஒப்பிட்டாலும் கோயில் சார்ந்த பொருளாதாரம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் என்றார்.
கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது, வழிபாட்டுடன் தொடர்புடைய நடைமுறைகள், கோயில்களை சுற்றி வளர்ந்து வரும் வணிகங்கள் என 365 நாட்களுமே இவை நடக்கின்றன , நாம் அனைவரும் இந்த பொருளாதார நடவடிக்கையில் பங்களிப்பு தருகிறோம் என கூறினார்.
மேலும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக தான் நன்கொடை வழங்குகிறார்கள் அந்த நன்கொடை பணத்தை அவர்களின் விருப்பங்களுக்காக செலவிட வேண்டும் என்றும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதற்கு அடிபணிந்து தான் ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச கோயில்கள் மாநாட்டின் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு ,நிதி சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகள் நெறிமுறை ,நெறிமுறை சார்ந்த நன்கொடைகள், நிலைத்தன்மை, பாதுகாப்பு, கூட்ட கட்டுப்பாடு மற்றும் நிதி வெளிப்படத் தன்மை ஆகியவை இடம்பெற்றிருப்பதை அவர் பாராட்டினார்.
நம்முடைய வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தாலும் அது ஒருபோதும் கடவுளுக்கு மாற்றாக உருவாகி விட முடியாது என கூறினார். கடவுள் என்பவர் கடவுள் தான், எந்த ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் தொழில் நுட்ப நிபுணராக இருந்தாலும் கடவுள் தீர்மானித்த விதியை தான் அவர் எதிர்கொண்டாக வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சரியான நேரத்தில் சரியான தலைவராக மோடி வந்திருக்கிறார் என குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, 2029 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என கூறினார். 2047 ஆம் ஆண்டு இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும், இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வெங்கடேஸ்வரர் கோயிலை கட்ட வேண்டும் என விரும்புவதாக அப்போது சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications