தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றாக இணைந்து மத்திய அரசின் delimitation முடிவுக்கு ஒன்றாக இணைந்து போராடி வரும் இதே வேளையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து போட்டிப்போட்டு வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச மாநில அரசு கடந்த மூன்று மாதங்களில் ஈர்த்த தொழில்துறை முதலீடுகளில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது.
சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு, இம்மாநிலத்திற்கு சுமார் ரூ.9,700 கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 3 மாதத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா முன்னோடியாக உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் பட்டியலில் இந்த 3 மாதத்தில் கேரியர் குளோபல் மற்றும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்துள்ளது.
கேரியர் குளோபல் என்பது ஏர் கண்டிஷனிங் துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சிட்டி தொழில்துறை பகுதியில் அதன் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.
கேரியர் குளோபல் நிறுவனத்திற்கு ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் குருகிராமில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இருப்பினும், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தென்னிந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சென்னையில் இந்த தொழிற்சாலையை நிறுவ பரிசீலனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தென்கொரிய நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஸ்ரீ சிட்டியில் தனது முதல் தென்னிந்திய உற்பத்தி ஆலையை ரூ. 5,000 கோடி முதலீட்டில் அமைக்க உறுதியளித்துள்ளது. இந்த முடிவை எடுக்கும் முன், எல்ஜி நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இடங்களைத் தேடி வந்தது.
எல்ஜி நிறுவனத்திற்கு ஏற்கனவே நொய்டா மற்றும் புனே-வில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனமும் ஸ்ரீ சிட்டியை தான் தேர்வு செய்துள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆறு வென்டார்களும் சிட்டியில் தங்களுடைய உற்பத்தி தளத்தை நிறுவ உறுதியளித்துள்ளன. இதன் மூலம் கூடுதலாக ரூ. 2,000 கோடி முதலீடு கிடைக்கும்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிடைக்காத பெரிய இடம் ஸ்ரீ சிட்டியில் தங்களுக்கு கிடைத்ததால் எல்ஜி நிறுவனம் இங்கு முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து Premier Energies நிறுவனம் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் நெல்லூரில் அமைந்துள்ள நாயடுபேட்டா இன்டஸ்ட்ரீயல் பார்க் பகுதியில் 4ஜிகா வாட் போட்டோவோல்டாயிக் சென் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.
இப்படி 3 நிறுவனங்கள் வாயிலாக சுமார் 9700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் பெற்றுள்ளது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications