9 பிஸ்னஸ் தோல்வி.. 10வது பிஸ்னஸ் மூலம் ரூ.1.48 லட்சம் கோடி..!

ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக மாற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை, நம்மை சுற்றி பலர் சொந்த தொழில் துவங்குவதற்காக போராடி வருபவர்களை பார்த்திருப்போம், ஏன் பலர் தொழிலை துவங்கி லாபம் அடைய முடியாமல் தவிப்பதையும் பாத்திருப்போம், இன்னும் சிலர் அடுத்தடுத்து துவங்கிய தொழில்கள் தோல்வியில் முடிந்திருப்பதையும் பாத்திருப்போம்.

இங்கு ஒருவர் 9 தொழிலை துவங்கி தோல்வி அடைந்தது மட்டும் அல்லாமல் 10வதாக துவங்கிய தொழில் பெரிய அளவில் கைகொடுத்து இன்று 1,48,729 கோடி ரூபாய் வர்த்தகத்திற்கு சொந்தக்காரராக உள்ளார். இவர் பெயர் அனில் அகர்வால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஒருபக்கம் விற்பனை செய்வதற்கும், மறுப்புறம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம்.

9 பிஸ்னஸ் தோல்வி.. 10வது பிஸ்னஸ் மூலம் ரூ.1.48 லட்சம் கோடி..!

பாட்னா-வில் சிறிய மார்வாடி வர்த்தகருக்கு மகனாக பிறந்த அனில் அகர்வால், வழக்கம் போல் தன்னுடைய குடும்ப வர்த்தகத்தில் இளம் வயதிலேயே சேர்ந்தார். ஆனால் பெரும்பலானோருக்கு இல்லாத ஒரு ஆர்வம் அனில் அகர்வால்-க்கு இருந்தது, தனது தந்தையின் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்வதோடு மேம்படுத்த வேண்டும் என்பது தான்.

இதன் விளையில் 19 வயதிலேயே தந்தையின் வர்த்தகம் மற்றும் குடும்பத்தை விட்டு மும்பைக்கு சொந்த தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையில் பாட்னா-வை விட்டு வெளியேறினார். 1970ல் பழைய ஸ்கிராப் பொருட்களை வாங்கி விற்கும் டீலர் ஆக மாறினார்.

9 பிஸ்னஸ் தோல்வி.. 10வது பிஸ்னஸ் மூலம் ரூ.1.48 லட்சம் கோடி..!

1976ல் Shamsher Sterling Corporation என்னும் நிறுவனத்தை வங்கி கடன் உதவியுடன் வாங்கினார். இந்த நிறவனம் காப்பர் மற்றும் பல்வேறு உலோகங்களை உற்பத்தி செய்து வருகிறது. அடுத்த 10 வருடத்திற்கு ஒருபக்கம் ஸ்கிராப் டீலர், மறுபுறம் உருக்கு ஆலை நிர்வாகம் செய்து வந்தார்.

1986ல் ஜெல்லி நிரப்பப்பட்ட கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலையை Sterlite Industries துவங்கினார், ஆனால் இதில் லாபம் அதிகளவிலான தடுமாற்றத்தை சந்தித்தார். இதற்கு முக்கிய காரணமான காப்பர் மற்றும் அலுமினியம் உலோகத்தை வெளியில் இருந்து வாங்காமல் சொந்தமாக தயாரிக்க முடிவு செய்தார்.

1993ல் Sterlite Industries முதல் முறையாக இந்தியாவில் காப்பர் உருக்காலை மற்றும் சுத்திகரிப்பு ஆலை அமைத்தார் அனில் அகர்வால், 1995ல் Sterlite Industries 4 வருடமாக மூடப்பட்டு இருந்த மெட்ரால் அலுமினியம் நிறுவனத்தை கைப்பற்றியது.

9 பிஸ்னஸ் தோல்வி.. 10வது பிஸ்னஸ் மூலம் ரூ.1.48 லட்சம் கோடி..!

இதை தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து பாரத் அலுமினியம் கம்பெனி (BALCO) 51 சதவீத பங்குகளை 551.50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றினார். அடுத்த வருடமே ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தில் 65 சதவீத பங்குகளை கைப்பற்றியது. இதை தொடர்ந்து சர்வதேச வர்த்தகத்திற்காக லண்டனில் நிறுவனத்தை அமைத்து, லண்டன் பங்குச்சந்தையில் ஐபிஓ-வும் வெளியிட்டார்.

இதன் பின்பு 2007ல் SESA GOA, 2010ல் Anglo American-வின் ஜிங்க் வர்த்தகம் நபிபியா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய சந்தைகளை கைப்பற்றியது. இப்படி வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் இன்று அதிகப்படியான கடன்களால் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அனில் அகர்வால்-ஐ மாணவர்கள் முன்னிலையில் பேச அழைக்கப்பட்டார். இப்போது இளம் தலைமுறையினர் மத்தியில் பேசுகையில் என்னுடைய முதல் வெற்றிகரமான தொழிலை துவங்குவதற்கு முன்பு 9 தொழில்களில் தோல்வி அடைந்துள்ளோன் என பேசியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+