மும்பை: தான் திவாலானதாகவும், தனது சொத்து மதிப்பு ஜீரோ என்றும் பிப்ரவரி 2020 இல் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அனில் அம்பானி அறிவித்தார். இந்த நிலையில், மோசமான காலத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது அவர் கடனை திருப்பிச் செலுத்த துவங்கியுள்ளார்.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனைத் தீர்த்தது, அதே நேரத்தில் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஜேசி ஃப்ளவர்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு ரூ.2,100 கோடியை செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"ரிலையன்ஸ் பவர் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடனற்ற நிறுவனமாக மாறுவதை இலக்காக கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் உள்ள ஒரே கடன் ஐடிபிஐ வங்கியின் செயல்பாட்டு மூலதனக் கடன் மட்டுமே" என்று வணிக வங்கியின் மூத்த நிர்வாகி கூறியுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மூன்று கடனாளிகளும் கூட்டாக சுமார் 400 கோடி ரூபாய் பெற்றுள்ளனர், இது அவர்களின் முதன்மைக் கடனில் 30-35% மீட்டெடுத்துள்ளனர் என்று மற்றொரு கடன் வழங்குபவர் கூறினார்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி, ஜனவரி 7ஆம் தேதி பங்குச்சந்தைக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, ஒரு ஸ்டாண்ட்ஸ்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆரம்பத்தில் இந்த ஸ்டாண்ட்ஸ்டில் ஒப்பந்தம் மார்ச் 20, 2024 வரை இருந்தது இது சமீபத்தில் மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது என்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் படி, JC Flowers ARC நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-க்கு எதிராக மார்ச் 31 வரை எவ்விதமான சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது, இதற்குக் கடனை தீர்க்க போதுமான நிதியை ஏற்பாடு செய்ய நிறுவனம் கால அவகாசம் பெறும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் பவர் மார்ச் 13 அன்று VFSI ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 240 கோடி ரூபாய் ஈக்விட்டி நிதியை திரட்டியது, வங்கிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு இந்த வருமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. VFSI ஹோல்டிங்ஸ் என்பது உலகளாவிய சொத்து மேலாளரான வார்டே பார்ட்னர்ஸின் துணை நிறுவனமாகும்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட கடன்கள் உட்பட, அசல் கடன் வழங்குநரான யெஸ் பேங்க், அதன் ரூ.48,000 கோடி கடன் புத்தகத்தை JC Flowers ARC க்கு மாற்றியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications