மும்பை: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு துறையில் கால் பதித்துள்ளது. அண்மையில் இந்திய சோலார் எனர்ஜி கழகம் நடத்திய பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்களுக்கான (battery energy storage system) ஏலத்தில் பங்கேற்று முக்கியமான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்திய சோலார் எனர்ஜி கழகத்திடமிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேமிப்பு திட்டம் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

500 மெகாவாட் / 1000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பினை நிறுவுவதற்கு ரிலையன்ஸ் பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்திய சோலார் எனர்ஜி கழகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ரிலையன்ஸ் பவருக்கு இந்த திட்டம் கிடைத்தது தெரியவந்துள்ளது.
இதன்படி build, own, and operate (BOO) அடிப்படையில் அதாவது கட்டமைத்தல், சொந்தமாக வைத்து செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. 1000/ 2000 மெகாவாட் அளவிலான பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் கோரும் பணியை இந்திய சோலார் எனர்ஜி கழகம் அறிவித்தது.
இதில் 500 முதல் 1000 மெகாவாட் அளவிலான பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் யூனிட்டுகளை அமைக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் பவருக்கும், மீதமுள்ள 500 மெகாவாட் மற்றும் 1000 மெகாவாட் திறன் உள்ள ஸ்டோரேஜ் அமைப்புகளை அமைக்கும் ஒப்பந்தம் ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட போது பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொண்டன. ஆனால் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவாக அதாவது ₹3.81999 lakh/MW/month என்ற அடிப்படையில் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரியதாகவும், எனவே அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த ஸ்டோரேஜ் மையத்தை ராஜஸ்தானில் அமைக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 26 மாதங்களில் இது செயல்பட தொடங்கும் என்று சொல்லப்படுகிறது . இந்தியாவில் தற்போது பேட்டரி ஸ்டோரேஜ் சிஸ்டமர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த துறையில் தற்போது டாடா பவர், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி மற்றும் அதானி குழுமம் ஆகியவை தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதன்முறையாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இதில் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications