ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானி மீது பொருளாதார குற்ற வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் மும்பை மற்றும் டெல்லியில் ரிலையன்ஸ் குரூப்-க்கு தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் ஒரு கட்டமாக 50 நிறுவனங்களும் 25 பேரும் PMLA கீழ் விசாரணையில் உள்ளனர்.
இந்த நிலையில் அனில் அம்பானி-க்கு ரூ.17,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கில், ஆகஸ்ட் 5ஆம் தேதி அமலாக்க துறை தலைமையகத்தில் அனில் அம்பானியை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடு வழக்குகளில் அனில் அம்பானிக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. SEBI அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம், CLE பிரைவேட் லிமிடெட் என்ற தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் கடன் தொகையை முறைகேடாக மாற்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதுக்குறித்து விரிவாக பார்ப்போம்.
அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப்-ல் நடைபெற்ற மோசடிகள் குறித்து செபி தனிப்பட்ட முறையில் விசாரணை செய்தது. இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை செபி அமைப்பு அமலாக்க துறை மற்றும் மற்ற இரண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (R Infra) ஆல் ரூ.10,000 கோடி பணத்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. SEBI அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் இந்த 10000 கோடி ரூபாய் பணத்தை CLE Pvt Ltd என்ற மறைக்கப்பட்ட தொடர்பு நிறுவனத்தின் மூலம் இடைநிறுவன கடன்களாக (ICDs) மாற்றி, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு திருப்பியதாக கூறப்படுகிறது. CLE நிறுவனம் விசாரணையின் போது "C" நிறுவனமாக அடையாளம் காணப்பட்டு, இந்த நிதி பரிமாற்றம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதில் முக்கியமாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிர்வாகம் CLE Pvt Ltd மூலம் நடைபெற்ற பண பரிமாற்றங்கள் மற்றும் இடைநிறுவன கடன்கள், பங்குதாரர்களிடம் அல்லது ஆடிட்டர்களிடம் தெளிவாக வெளிப்படுத்தப்படாமல் இருந்ததாக SEBI குற்றம் சாட்டுகிறது.
இந்த நடவடிக்கைகள், பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு ஒரு நன்கு திட்டமிடப்பட்ட திட்டமாக இருக்கலாம் என்று அமலாக்க துறை சந்தேகிக்கிறது. இதனால் நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications